ETV Bharat / state

வைகை ஆற்றில் திடீரென முளைத்த கார் பார்க்கிங்!

மதுரை: வைகை ஆற்றின் மையப்பகுதிக்குள் சமூக விரோதிகளால் கார் நிறுத்துமிடம் (பார்க்கிங்) அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author img

By

Published : May 28, 2019, 10:29 AM IST

வைகை ஆறு

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக் கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படுகிறது. வைகையில் தண்ணீர் இல்லாததால் ஒரு சிலர் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆற்றின் கீழத்தோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பணிகள் தங்களது வாகனங்களை வைகை ஆற்றுக்குள் நிறுத்தி-வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வைகை ஆறு

அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் காக்கப்பட வேண்டிய வைகை ஆறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக் கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படுகிறது. வைகையில் தண்ணீர் இல்லாததால் ஒரு சிலர் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆற்றின் கீழத்தோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பணிகள் தங்களது வாகனங்களை வைகை ஆற்றுக்குள் நிறுத்தி-வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வைகை ஆறு

அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் காக்கப்பட வேண்டிய வைகை ஆறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
28.05.2019


*மதுரை வைகை ஆற்றில் திடீரென முளைத்த கார் பார்க்கிங் - மதுரை மக்கள் அதிர்ச்சி*

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக் கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படுகிறது,

அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் வைகை ஆற்றில் மைய மண்டபம் பகுதி அமைந்துள்ள கீழதோப்பு பகுதியில்
வாகனங்களை நிறுத்தி  வருமான ஈட்டி வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில்,

அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்காலிகமாக பாதை அமைத்து திடீரென சிலர் வைகை ஆற்றுக்குள் கார் பார்க்கிங் அமைத்துள்ளனர்,

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் சுற்றுலா பணிகள் வந்த வாகனங்கள் வைகை ஆற்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

புராதன சின்னமான வைகை ஆற்றை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது,

வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் இறங்க வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தி புராதன சின்னம் வைகை ஆற்றைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Visual send in ftp
Visual name : TN_MDU_05_27_CAR PARKING VAIKAI RIVER_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.