ETV Bharat / state

அவரு பேசுனதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது - எல். முருகன்

author img

By

Published : Jan 11, 2021, 6:15 AM IST

மதுரை: அதிமுக பொதுக்குழுவில் பாஜக குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமிக்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை, எங்களைப் பற்றி எடப்பாடி பேசினாரா? என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

முருகன்
முருகன்

மதுரை திருப்பாலைப் பகுதியில் பாஜக சார்பில் கிராம பொங்கல் விழா தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பொய்ப் பரப்புரை செய்துவருவதுதான் ஸ்டாலினின் வாடிக்கை, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் வரவேற்கிறார்கள்.

திமுகவிற்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியைத் தருவார்கள், மத்திய அரசு பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்கிவருகிறது. ஆனால் அது குறித்து தவறான பரப்புரை மேற்கொள்கிறது திமுக. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சமூக மக்களையும் இணைப்பதில் பாஜக முனைப்புக் காட்டுகிறது.

பாஜக மாநில தலைவர் எல். முருகன்
மறுக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை பாஜக மீட்டெடுக்கும். பாரதியார், திருவள்ளுவர் உருவங்களை திமுக திட்டமிட்டு மறைத்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான திமுகவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டுவார்கள், திமுக ஆட்சிக்கு வரத் துடிக்கின்றனர். திமுகவின் ஊழலையும், கட்டப்பஞ்சாயத்தையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

திமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூங்கோதைக்கே அக்கட்சியில் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை, தொண்டாமுத்தூரில் பெண் ஒருவர் திமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார். திமுகவில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து கனிமொழி பேச வேண்டும்.

பாஜக தேர்தல் அறிக்கைப் பொதுமக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பாஜக குறித்த கே.பி. முனுசாமியின் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர்கள்தான் பதிலளிப்பார்கள். பாஜக குறித்து எடப்பாடி பேசியுள்ளாரா? கே.பி. முனுசாமியின் பேச்சுக்கு விரைவில் பதில் அளிப்பேன் பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

மதுரை திருப்பாலைப் பகுதியில் பாஜக சார்பில் கிராம பொங்கல் விழா தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பொய்ப் பரப்புரை செய்துவருவதுதான் ஸ்டாலினின் வாடிக்கை, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் வரவேற்கிறார்கள்.

திமுகவிற்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியைத் தருவார்கள், மத்திய அரசு பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்கிவருகிறது. ஆனால் அது குறித்து தவறான பரப்புரை மேற்கொள்கிறது திமுக. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சமூக மக்களையும் இணைப்பதில் பாஜக முனைப்புக் காட்டுகிறது.

பாஜக மாநில தலைவர் எல். முருகன்
மறுக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை பாஜக மீட்டெடுக்கும். பாரதியார், திருவள்ளுவர் உருவங்களை திமுக திட்டமிட்டு மறைத்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான திமுகவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டுவார்கள், திமுக ஆட்சிக்கு வரத் துடிக்கின்றனர். திமுகவின் ஊழலையும், கட்டப்பஞ்சாயத்தையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

திமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூங்கோதைக்கே அக்கட்சியில் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை, தொண்டாமுத்தூரில் பெண் ஒருவர் திமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார். திமுகவில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து கனிமொழி பேச வேண்டும்.

பாஜக தேர்தல் அறிக்கைப் பொதுமக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பாஜக குறித்த கே.பி. முனுசாமியின் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர்கள்தான் பதிலளிப்பார்கள். பாஜக குறித்து எடப்பாடி பேசியுள்ளாரா? கே.பி. முனுசாமியின் பேச்சுக்கு விரைவில் பதில் அளிப்பேன் பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.