ETV Bharat / state

தெற்கைவிட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு - சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 7, 2022, 6:09 AM IST

தெற்கைவிட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நேற்று (பிப்ரவரி 6) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்கு ரயில்வே பகுதிகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கு வெறும் 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஊடகத்தில் வெளிப்படுத்தியிருந்தேன்.

உண்மையை மறைக்க முயற்சி

இதற்குப் பதிலளிக்க வேண்டியது ரயில்வே அமைச்சகம். ஆனால், தெற்கு ரயில்வே நிர்வாகமோ தமிழ்நாட்டுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டதுபோல செய்தி வெளியிட்டுள்ளது. நான் வெளியிட்ட அறிக்கையில் இரட்டைப் பாதை திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருந்தேன்.

மதுரை - கன்னியாகுமரி பாதை 21- 22இல் முடியும் என்ற அறிவிப்பு நடைமுறையாகவில்லை என்பதையும், குறைந்தது இன்னும் இரண்டாண்டுகளிலாவது இதை முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர் இரட்டைப் பாதை திட்டங்களுக்குப் பெயரளவுக்கு ஆயிரம் ரூபாயும், ஒரு கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்குப் பதில் அளிக்காமல் சதவீதக் கணக்கிற்குள் புகுந்து உண்மையை மறைக்க முயல்கிறது தெற்கு ரயில்வே. நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு ரயில்வேக்கு ஏழாயிரத்து 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் என்று கூறியுள்ளார்கள். ஆனால், வடக்கு ரயில்வேக்கு 66 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏன் மறைக்கிறார்கள்.

101 மடங்கு அதிக நிதி

முழு உண்மையைச் சொல்வதாக இருந்தால், கடந்த நான்கு ஆண்டுகள் புதிய வழித்தடத் திட்டத்திற்கான ஒதுக்கீடு என்பது தெற்கு ரயில்வேக்கு வெறும் 308 கோடி ரூபாய் மட்டுமே (2019-20இல் 52 கோடி, 2020-21இல் 102 கோடி, 2021-22இல் 95 கோடி, 2022-23இல் 59 கோடி). வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்கு ஒதுக்கீடு 31 ஆயிரத்து எட்டு கோடி (2019-20இல் 994 கோடி, 2020-21இல் 7,278 கோடி, 2021-22இல் 9,454 கோடி, 2022-23இல் 13,282 கோடி) ஆகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு ரயில்வேயைவிட, வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது. இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்கும், தெற்கு ரயில்வேக்கும் போதிய நிதி ஒதுக்கவும், புதிய வழித்தடத் திட்டங்களை விரைவுப்படுத்தவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் மத்திய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தி கூடுதல் தொகை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிதியில் சமப் பங்கீடு

அதற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டினைவிட, இந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி சற்று கூடுதலாக இருப்பதற்கு, கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையையொட்டி நாங்கள் நடத்திய போராட்டம் முதன்மையான காரணம்.

நாடாளுமன்றத்திலும், நிலைக்குழு கூட்டங்களிலும் தெற்கு ரயில்வே புறக்கணிக்கப்படுவதை இடைவிடாது சுட்டிக் காட்டியுள்ளோம். தண்டவாளங்கள் மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது ரயிலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கிற்கும், தெற்கிற்கும் சமப் பங்கீடு இருக்க வேண்டும் என்பது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அன்பில் மகேஷ்!

மதுரை: மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நேற்று (பிப்ரவரி 6) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்கு ரயில்வே பகுதிகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கு வெறும் 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஊடகத்தில் வெளிப்படுத்தியிருந்தேன்.

உண்மையை மறைக்க முயற்சி

இதற்குப் பதிலளிக்க வேண்டியது ரயில்வே அமைச்சகம். ஆனால், தெற்கு ரயில்வே நிர்வாகமோ தமிழ்நாட்டுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டதுபோல செய்தி வெளியிட்டுள்ளது. நான் வெளியிட்ட அறிக்கையில் இரட்டைப் பாதை திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருந்தேன்.

மதுரை - கன்னியாகுமரி பாதை 21- 22இல் முடியும் என்ற அறிவிப்பு நடைமுறையாகவில்லை என்பதையும், குறைந்தது இன்னும் இரண்டாண்டுகளிலாவது இதை முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர் இரட்டைப் பாதை திட்டங்களுக்குப் பெயரளவுக்கு ஆயிரம் ரூபாயும், ஒரு கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்குப் பதில் அளிக்காமல் சதவீதக் கணக்கிற்குள் புகுந்து உண்மையை மறைக்க முயல்கிறது தெற்கு ரயில்வே. நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு ரயில்வேக்கு ஏழாயிரத்து 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் என்று கூறியுள்ளார்கள். ஆனால், வடக்கு ரயில்வேக்கு 66 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏன் மறைக்கிறார்கள்.

101 மடங்கு அதிக நிதி

முழு உண்மையைச் சொல்வதாக இருந்தால், கடந்த நான்கு ஆண்டுகள் புதிய வழித்தடத் திட்டத்திற்கான ஒதுக்கீடு என்பது தெற்கு ரயில்வேக்கு வெறும் 308 கோடி ரூபாய் மட்டுமே (2019-20இல் 52 கோடி, 2020-21இல் 102 கோடி, 2021-22இல் 95 கோடி, 2022-23இல் 59 கோடி). வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்கு ஒதுக்கீடு 31 ஆயிரத்து எட்டு கோடி (2019-20இல் 994 கோடி, 2020-21இல் 7,278 கோடி, 2021-22இல் 9,454 கோடி, 2022-23இல் 13,282 கோடி) ஆகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு ரயில்வேயைவிட, வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது. இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்கும், தெற்கு ரயில்வேக்கும் போதிய நிதி ஒதுக்கவும், புதிய வழித்தடத் திட்டங்களை விரைவுப்படுத்தவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் மத்திய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தி கூடுதல் தொகை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிதியில் சமப் பங்கீடு

அதற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டினைவிட, இந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி சற்று கூடுதலாக இருப்பதற்கு, கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையையொட்டி நாங்கள் நடத்திய போராட்டம் முதன்மையான காரணம்.

நாடாளுமன்றத்திலும், நிலைக்குழு கூட்டங்களிலும் தெற்கு ரயில்வே புறக்கணிக்கப்படுவதை இடைவிடாது சுட்டிக் காட்டியுள்ளோம். தண்டவாளங்கள் மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது ரயிலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கிற்கும், தெற்கிற்கும் சமப் பங்கீடு இருக்க வேண்டும் என்பது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அன்பில் மகேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.