மதுரை: ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர், சந்தோஷ் குமார் (29). இவர் கணினி மென்பொருள் வல்லுநர் ஆக வெளிநாட்டில் பணி புரிந்து வந்தார். பின்னர் சொந்த ஊர் மதுரைக்கே வந்து விட்டார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அவருடைய தாயார் மோகனா மனமுடைந்து வீட்டிற்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி நிறைமாத கர்ப்பிணி; புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!