ETV Bharat / state

செல்ஃபோன் கடையில் ரூ. 1லட்சம் திருட்டு!

author img

By

Published : Dec 3, 2019, 3:28 PM IST

மதுரை: சோழவந்தான் அருகே செல்ஃபோன் கடையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பணம், செல்ஃபோன் உள்ளிட்டவை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

Mobile Shop Theft
Mobile Shop Theft

மதுரை மாவட்டம் அருகே உள்ள சோழவந்தான் பகுதியைச் சேரந்தவர் சதீஷ்குமார். இவர் சோழவந்தான் பேரூராட்சி அருகே உள்ள மார்கெட் சாலையில் செல்ஃபோன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இங்கு செல்ஃபோன் ரீசார்ஜ், செல்ஃபோன் பழுது, புதிய செல்ஃபோன் விற்பனை உள்ளிட்டவை பார்க்கபடுகிறது. சதீஷ்குமார் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சட்டர் தூக்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையை திறந்து பார்த்த போது கல்லாவில் இருந்த 80 ஆயிரம் ரொக்கப்பணம், 30 புதிய செல்ஃபோன்கள், செல்ஃபோன் உதிரிபாகங்கள் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணமல் போனது தெரியவந்தது.

செக்ஃபோன் கடையை ஆய்வு செய்யும் காவல் துறையினர்

இதுகுறித்து உடனடியாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து கடை, கடையின் சுற்றுபுற பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஐஐடி கண்காணிப்பாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

மதுரை மாவட்டம் அருகே உள்ள சோழவந்தான் பகுதியைச் சேரந்தவர் சதீஷ்குமார். இவர் சோழவந்தான் பேரூராட்சி அருகே உள்ள மார்கெட் சாலையில் செல்ஃபோன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இங்கு செல்ஃபோன் ரீசார்ஜ், செல்ஃபோன் பழுது, புதிய செல்ஃபோன் விற்பனை உள்ளிட்டவை பார்க்கபடுகிறது. சதீஷ்குமார் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சட்டர் தூக்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையை திறந்து பார்த்த போது கல்லாவில் இருந்த 80 ஆயிரம் ரொக்கப்பணம், 30 புதிய செல்ஃபோன்கள், செல்ஃபோன் உதிரிபாகங்கள் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணமல் போனது தெரியவந்தது.

செக்ஃபோன் கடையை ஆய்வு செய்யும் காவல் துறையினர்

இதுகுறித்து உடனடியாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து கடை, கடையின் சுற்றுபுற பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஐஐடி கண்காணிப்பாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

Intro:மதுரை, சோழவந்தான் பேரூராட்சி அருகே இரவு நேரத்தில் தனியார் மொபைல் கடையின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் திருட்டு.Body:

மதுரை, சோழவந்தான் பேரூராட்சி அருகே இரவு நேரத்தில் தனியார் மொபைல் கடையின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் திருட்டு.

சோழவந்தான் போலீசார் தீவிர விசாரணை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் அருகே மார்க்கெட் ரோட்டில் ஜனா மொபைல் என்கிற தனியார் செல் கடை ஒன்று உள்ளது.

இங்கு செல் ரீசார்ஜ், புதிய செல் விற்பனை, மற்றும் செல் சர்வீஸ் பார்க்கப்படுகிறது... கடையின் உரிமையாளர் சோழவந்தானை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் வழக்கம் போல கடையை நேற்று இரவு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்... இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சட்டர் தூக்கிய நிலையில் இருந்தது.கடைக்கு 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருக்கும்.. இதை சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர் சதீஸ் குமார் உடனே சோழவந்தான் போலீசுக்கு தகவல் கொடுக்க உடனே விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர்.கடையை திறந்து பார்த்த போது 30க்கும் மேற்பட்ட புதிய செல்போன் மற்றும் ரொக்க பணம் 80ஆயிரம், செல்போன் உதிரி பாகங்கள் காணாமல் போனது தெரியவந்தது. கடை உரிமையாளர் சதீஸ் குமார் திருடப்பட்ட பணம் மற்றும் செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு காவல் துறையிடம் கேட்டுக்கொண்டார்.

திருடியவர்கள் யார் என்பது குறித்து சோழவந்தான் போலீசார் திவிராமாக விசாரணை செய்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.