ETV Bharat / state

முதியோர்களின் காலில் விழுந்து கட்டடங்களுக்கு தண்ணீர் அடித்து வாக்குச் சேகரித்த அமைச்சர்!

author img

By

Published : Mar 23, 2021, 10:42 PM IST

மதுரை: கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவிசெய்ய களத்தில் வந்து நின்றது அதிமுக அரசுதான். வேறு எவரும் மக்களை வந்து சந்திக்கவில்லை என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்குச் சேகரிப்பின்போது தெரிவித்தார்.

udhayakumar
udhayakumar

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சௌடார்பட்டி, வலையப்பட்டி, பூசலப்புரம், மதிப்பனூர், நாகையாபுரம், இடையபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரோனா காலத்தில் மக்களோடு துணைநின்றது அதிமுக அரசு - அமைச்சர் உதயகுமார்
பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தபோது, கட்டட தொழிலாளிக்கு உதவும்வண்ணம்‌ கட்டடத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார்.
பிறகு அந்த ஊரைச் சேர்ந்த வயதான பெண்களின் காலில் விழுந்து வணங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பெண் பணியாளர்களோடு இணைந்து அவர்களுக்கு சிறிது நேரம் உதவிபுரிந்தார்.
பிறகு பரப்புரையின்போது பேசிய அவர் கூறியதாவது:
இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய்ப் பரப்புரைகளைச் செய்துவருகின்றனர். சட்டப்பேரவையில் தற்காலிகமான மசோதாதான் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர்.
68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு என்றும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீடு என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 இட ஒதுக்கீடு என்றும் கூறி வருகின்றனர். அது உண்மை அல்ல; மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதிமுக செல்வாக்கை யாரும் குறைத்து நினைத்தால் அது பகல் கனவாகவே போய்விடும். 68 சமுதாய டிஎன்டி அங்கீகாரத்தை வழங்கி 50 ஆண்டுகால கனவை நனவாக்கியது அதிமுக அரசே. நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் நம்மைப் பிரிக்க முடியாது.


கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைப் புரிந்தது அதிமுக அரசுதான். ஆனால் அச்சமயம் மக்களுக்கு உதவிபுரிய எவரும் வரவில்லை. உங்கள் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி வருவார். வந்தவுடன் 163 திட்டங்களை நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேள்வி கேட்பது எனது உரிமை! - ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சௌடார்பட்டி, வலையப்பட்டி, பூசலப்புரம், மதிப்பனூர், நாகையாபுரம், இடையபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரோனா காலத்தில் மக்களோடு துணைநின்றது அதிமுக அரசு - அமைச்சர் உதயகுமார்
பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தபோது, கட்டட தொழிலாளிக்கு உதவும்வண்ணம்‌ கட்டடத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார்.
பிறகு அந்த ஊரைச் சேர்ந்த வயதான பெண்களின் காலில் விழுந்து வணங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பெண் பணியாளர்களோடு இணைந்து அவர்களுக்கு சிறிது நேரம் உதவிபுரிந்தார்.
பிறகு பரப்புரையின்போது பேசிய அவர் கூறியதாவது:
இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய்ப் பரப்புரைகளைச் செய்துவருகின்றனர். சட்டப்பேரவையில் தற்காலிகமான மசோதாதான் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர்.
68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு என்றும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீடு என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 இட ஒதுக்கீடு என்றும் கூறி வருகின்றனர். அது உண்மை அல்ல; மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதிமுக செல்வாக்கை யாரும் குறைத்து நினைத்தால் அது பகல் கனவாகவே போய்விடும். 68 சமுதாய டிஎன்டி அங்கீகாரத்தை வழங்கி 50 ஆண்டுகால கனவை நனவாக்கியது அதிமுக அரசே. நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் நம்மைப் பிரிக்க முடியாது.


கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைப் புரிந்தது அதிமுக அரசுதான். ஆனால் அச்சமயம் மக்களுக்கு உதவிபுரிய எவரும் வரவில்லை. உங்கள் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி வருவார். வந்தவுடன் 163 திட்டங்களை நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேள்வி கேட்பது எனது உரிமை! - ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.