ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி வழிபாடு: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

author img

By

Published : Sep 9, 2021, 12:30 PM IST

மதுரை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்துசெய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவோ, கரைக்கவோ தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த குற்றாலநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கருத்தில்கொண்டு, பரவலைத் தடுக்கும்விதமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், கூட்டமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும், மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவி வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து, கரோனா தடுப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், 12ஆம் தேதிவரை அவற்றை வைத்திருந்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவோ, கரைக்கவோ தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த குற்றாலநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கருத்தில்கொண்டு, பரவலைத் தடுக்கும்விதமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், கூட்டமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும், மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவி வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து, கரோனா தடுப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், 12ஆம் தேதிவரை அவற்றை வைத்திருந்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.