ETV Bharat / state

ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கிடாவிருந்து திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்!

author img

By

Published : Jun 5, 2022, 5:45 PM IST

சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்ட பிரமாண்ட கோயில் திருவிழா மதுரை அருகே வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு விருந்தாக சமைக்கப்பட்டன.

ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கோயில் திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்
ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கோயில் திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்

மதுரை திருமங்கலம் அருகேயுள்ளது சொரிக்காம்பட்டி-பெருமாள் கோவில்பட்டி கிராமம். இங்கு உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் திருவிழா இன்று(ஜூன் 5) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்பட்டிருந்தன.

இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவைத் தேடிச் செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை விரட்டமாட்டார்கள். இது பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கமாகும். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோயிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியைப் பயன்படுத்தி சாதத்துடன் உணவாக ’கிடா விருந்து’ சமைக்கப்பட்டது.

இந்தக் கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. வாழை இலையில் சாதமும் ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டன. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச்செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருகை தருவார்கள்.

திருமங்கலம், சொரிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி , குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இது சமூக நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட திருவிழாவாகும். குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு நேர்த்திக் கடனாக ஆடுகளை கோயிலுக்குப் பக்தர்கள் நேர்ந்து விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கோயில் திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்

இதையும் படிங்க: மஞ்சள் பை விழிப்புணர்வை குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் மேற்கொண்ட மதுரை இளைஞர்

மதுரை திருமங்கலம் அருகேயுள்ளது சொரிக்காம்பட்டி-பெருமாள் கோவில்பட்டி கிராமம். இங்கு உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் திருவிழா இன்று(ஜூன் 5) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்பட்டிருந்தன.

இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவைத் தேடிச் செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை விரட்டமாட்டார்கள். இது பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கமாகும். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோயிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியைப் பயன்படுத்தி சாதத்துடன் உணவாக ’கிடா விருந்து’ சமைக்கப்பட்டது.

இந்தக் கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. வாழை இலையில் சாதமும் ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டன. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச்செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருகை தருவார்கள்.

திருமங்கலம், சொரிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி , குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இது சமூக நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட திருவிழாவாகும். குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு நேர்த்திக் கடனாக ஆடுகளை கோயிலுக்குப் பக்தர்கள் நேர்ந்து விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கோயில் திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்

இதையும் படிங்க: மஞ்சள் பை விழிப்புணர்வை குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் மேற்கொண்ட மதுரை இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.