ETV Bharat / state

வெளி மாநில மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் இருப்பிட சான்று? நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Aug 26, 2019, 4:55 PM IST

மதுரை: வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை

மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், "தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 85 விழுக்காடு இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15 விழுக்காடு இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கலந்தாய்வில் 126 வெளி மாநில மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் செயலர் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ”அது குறித்த விபரங்களை அறிய நீதிமன்றம் விரும்புகிறது. அதனடிப்படையிலேயே 126 பேரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், "தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 85 விழுக்காடு இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15 விழுக்காடு இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கலந்தாய்வில் 126 வெளி மாநில மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் செயலர் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ”அது குறித்த விபரங்களை அறிய நீதிமன்றம் விரும்புகிறது. அதனடிப்படையிலேயே 126 பேரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Intro:எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

MBBS கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது ,என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.Body:எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

MBBS கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது ,என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

தமிழக அரசு மற்றும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில், "தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 126 வெளி மாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

எனவே,தமிழக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .மேலும் தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என
கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அது குறித்த விபரங்களை அறிய நீதிமன்றம் விரும்புகிறது. அதனடிப்படையிலேயே 126 பேரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, அரசுத்தரப்பு மற்றும் கலந்தாய்வில் அழைக்கப்பட்ட பிற மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 பேரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.