ETV Bharat / state

மதுரையின் தாகம் தீர்க்கும் நீண்டநாள் கனவுத் திட்டம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

author img

By

Published : Dec 4, 2020, 8:37 AM IST

Updated : Dec 4, 2020, 11:12 AM IST

மதுரை: மதுரை மக்களின் நீண்டகால குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும்விதமாக ரூ.1,295 கோடி மதிப்பிலான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மதுரையின் புதிய குடிநீர் திட்டம்
மதுரையின் புதிய குடிநீர் திட்டம்

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ரூ.1,295 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து 115 எம்எல்டியும் (மில்லியன் லிட்டர்), வைகை ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் மூலம் 30 எம்எல்டியும், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 10 எம்எல்டி என 155 எம்எல்டி தண்ணீர் பெறப்பட்டு 100 வார்டுகளுக்கும் நபர் ஒருவருக்கு தினசரி 100 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர்
புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர்

இந்நிலையில், கோடைக் காலங்களில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதை நிவர்த்திசெய்யும் வகையிலும் மதுரை நகரில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்கவும் 'அம்ருத்' திட்டத்தின்கீழ் முல்லைப்பெரியாறிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இத்திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுதவி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியோடு நிறைவேற்றப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு 2017ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டது. இதனையடுத்து, அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் உள்ளிட்ட தொடக்கக் கட்டப்பணிகள் தொடங்கின.

புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இடையில் மக்களவைத் தேர்தல், கரோனா பொதுமுடக்கம் போன்றவற்றால் திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது திட்டத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

முதல் கட்டம்: லோயர் கேம்ப் பகுதியில் ரூ.14.78 கோடியில் தடுப்பணை கட்டுவது, நீரேற்று நிலையம் அமைப்பது, பின்னர் அங்கிருந்து ரூ.318 கோடி மதிப்பில் 96 கி.மீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீரை பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவருதல்.

இரண்டாம் கட்டம்: பண்ணைப்பட்டியில் ரூ.122.90 கோடி செலவில் 125 எம்எல்டி தண்ணீரைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், தண்ணீர் கொண்டுவருவதற்கான கால்வாய்கள் அமைத்தல், தண்ணீர் சேமிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வது.

மூன்றாம் கட்டம்: ரூ.475.75 கோடி செலவில் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மதுரை நகருக்குத் தண்ணீர் கொண்டுவருதல், இதற்காக 54 கி.மீட்டர் தூரம் பிரதான குழாய்கள் அமைப்பது, குடிநீரை விநியோகிக்கும் வகையில் 38 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும்.

மதுரையின் புதிய குடிநீர் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!

மேலும் ரூ.270 கோடி செலவில் மதுரையில் 855 கி.மீட்டர் அளவில் குடிநீர் வழங்கல் பாதை அமைப்பது, ரூ.94.33 கோடியில் இதர துறைப் பணிகள் என ரூ.1295.75 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

பணிகள் முடிவடைந்தவுடன் மதுரை நகரின் 100 வார்டுகளும் 81 குடிநீர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அலுவலர்கள் தலைமையில் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்படும்.

மேலும் மதுரை நகரில் ஏற்கெனவே உள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டிகளுடன் 81 மேல்நிலைத்தொட்டிகள் உருவாக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும். அனைத்து வீடுகளுக்கும் மீட்டர் பொருத்தப்படுவதால் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பது, சட்டவிரோதமாக இணைப்புப் பெறுவது, தண்ணீர்த் திருட்டு போன்றவையும் தடுக்கப்படும்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கும் இந்தத் திட்டத்தை 2023 டிசம்பருக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மதுரை நகரில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ரூ.1,295 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து 115 எம்எல்டியும் (மில்லியன் லிட்டர்), வைகை ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் மூலம் 30 எம்எல்டியும், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 10 எம்எல்டி என 155 எம்எல்டி தண்ணீர் பெறப்பட்டு 100 வார்டுகளுக்கும் நபர் ஒருவருக்கு தினசரி 100 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர்
புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர்

இந்நிலையில், கோடைக் காலங்களில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதை நிவர்த்திசெய்யும் வகையிலும் மதுரை நகரில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்கவும் 'அம்ருத்' திட்டத்தின்கீழ் முல்லைப்பெரியாறிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இத்திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுதவி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியோடு நிறைவேற்றப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு 2017ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டது. இதனையடுத்து, அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் உள்ளிட்ட தொடக்கக் கட்டப்பணிகள் தொடங்கின.

புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இடையில் மக்களவைத் தேர்தல், கரோனா பொதுமுடக்கம் போன்றவற்றால் திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது திட்டத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

முதல் கட்டம்: லோயர் கேம்ப் பகுதியில் ரூ.14.78 கோடியில் தடுப்பணை கட்டுவது, நீரேற்று நிலையம் அமைப்பது, பின்னர் அங்கிருந்து ரூ.318 கோடி மதிப்பில் 96 கி.மீட்டர் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீரை பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவருதல்.

இரண்டாம் கட்டம்: பண்ணைப்பட்டியில் ரூ.122.90 கோடி செலவில் 125 எம்எல்டி தண்ணீரைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், தண்ணீர் கொண்டுவருவதற்கான கால்வாய்கள் அமைத்தல், தண்ணீர் சேமிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வது.

மூன்றாம் கட்டம்: ரூ.475.75 கோடி செலவில் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மதுரை நகருக்குத் தண்ணீர் கொண்டுவருதல், இதற்காக 54 கி.மீட்டர் தூரம் பிரதான குழாய்கள் அமைப்பது, குடிநீரை விநியோகிக்கும் வகையில் 38 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும்.

மதுரையின் புதிய குடிநீர் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!

மேலும் ரூ.270 கோடி செலவில் மதுரையில் 855 கி.மீட்டர் அளவில் குடிநீர் வழங்கல் பாதை அமைப்பது, ரூ.94.33 கோடியில் இதர துறைப் பணிகள் என ரூ.1295.75 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

பணிகள் முடிவடைந்தவுடன் மதுரை நகரின் 100 வார்டுகளும் 81 குடிநீர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அலுவலர்கள் தலைமையில் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்படும்.

மேலும் மதுரை நகரில் ஏற்கெனவே உள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டிகளுடன் 81 மேல்நிலைத்தொட்டிகள் உருவாக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும். அனைத்து வீடுகளுக்கும் மீட்டர் பொருத்தப்படுவதால் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பது, சட்டவிரோதமாக இணைப்புப் பெறுவது, தண்ணீர்த் திருட்டு போன்றவையும் தடுக்கப்படும்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கும் இந்தத் திட்டத்தை 2023 டிசம்பருக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மதுரை நகரில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி

Last Updated : Dec 4, 2020, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.