ETV Bharat / state

மல்லிகை பூ விலை குறைய வாய்ப்பு!

மதுரை: ஒரு கிலோ மல்லிகை பூ இன்று (பிப்.15) ரூ.1500க்கு விற்பனை ஆன நிலையில் நாளை விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Feb 15, 2021, 10:26 PM IST

flower  market  jasmine  price  மதுரை மல்லிகை பூ விலை குறைய வாய்ப்பு  மதுரை மல்லிகை  Madurai Jasmine flower  Madurai Jasmine flower prices likely to fall
Madurai Jasmine flower

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இன்று (பிப்.15) மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இங்கு நிர்ணயம் செய்யப்படும் பூக்களின் விலை பிற மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். குறிப்பாக மதுரை மல்லிகை பிற மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது பூக்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அவ்வப்போது விலை குறைந்து காணப்படுகிறது.

நேற்றையதினம் (பிப்.14) சுபமுகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூபாய் 3000 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.15) கணிசமாக விலை குறைந்து ரூபாய் 1500-க்கு விற்பனையானது.

பிற பூக்களின் விலையைப் பொறுத்தவரை பிச்சிப்பூ ரூ.1000, முல்லை ரூ.1200, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.100, பட்ரோஸ் ரூ.100, செவ்வந்தி ரூ.180 அரளி ரூ.750, தாமரை ஒன்றுக்கு ரூ.10 என கணிசமாக விலை குறைந்ததால் நாளை மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தீபாவளியில் உச்சத்தில் இருந்த மல்லிகைப் பூ‌வின் விலை மீண்டும் சரிவு!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இன்று (பிப்.15) மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இங்கு நிர்ணயம் செய்யப்படும் பூக்களின் விலை பிற மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். குறிப்பாக மதுரை மல்லிகை பிற மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது பூக்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அவ்வப்போது விலை குறைந்து காணப்படுகிறது.

நேற்றையதினம் (பிப்.14) சுபமுகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூபாய் 3000 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.15) கணிசமாக விலை குறைந்து ரூபாய் 1500-க்கு விற்பனையானது.

பிற பூக்களின் விலையைப் பொறுத்தவரை பிச்சிப்பூ ரூ.1000, முல்லை ரூ.1200, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.100, பட்ரோஸ் ரூ.100, செவ்வந்தி ரூ.180 அரளி ரூ.750, தாமரை ஒன்றுக்கு ரூ.10 என கணிசமாக விலை குறைந்ததால் நாளை மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தீபாவளியில் உச்சத்தில் இருந்த மல்லிகைப் பூ‌வின் விலை மீண்டும் சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.