ETV Bharat / state

திருமண்டலம் நிறுவனங்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கீழ் இயங்கும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - admin

நெல்லை: சிஎஸ்ஐ திருமண்டலம், டிடிடிஏ ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களை ஓய்வு பெற்ற நீதிபதிகள் கீழ் நிர்வகிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Aug 6, 2019, 6:14 AM IST

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழுத் தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் அவர் கூறியதாவது, ” நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம், டிடிடிஏ ஆகியவற்றிற்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 23.4.2017 முதல் நடைபெற்ற இடமாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்னும் இரு வாரங்களில் இந்த நிர்வாகிகளிடம் வழங்கவேண்டும். திருமண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் ஆகியவற்றை நிர்வாகக் குழு முன்வைத்து நிர்வாகிகள் மேற்பார்வையில் முடிவெடுக்க வேண்டும்.

இதில் ஏதேனும் பிரச்னை நேர்ந்தால் நிர்வாகிகளின் முடிவே இறுதியானதாக இருக்கும். இடமாறுதல், நியமனங்களை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் மனு அளிக்க வேண்டும். நெல்லை திருமண்டலம், டிடிடிஏ கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சம்பளத்தை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.”, என்று நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழுத் தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் அவர் கூறியதாவது, ” நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம், டிடிடிஏ ஆகியவற்றிற்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 23.4.2017 முதல் நடைபெற்ற இடமாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்னும் இரு வாரங்களில் இந்த நிர்வாகிகளிடம் வழங்கவேண்டும். திருமண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் ஆகியவற்றை நிர்வாகக் குழு முன்வைத்து நிர்வாகிகள் மேற்பார்வையில் முடிவெடுக்க வேண்டும்.

இதில் ஏதேனும் பிரச்னை நேர்ந்தால் நிர்வாகிகளின் முடிவே இறுதியானதாக இருக்கும். இடமாறுதல், நியமனங்களை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் மனு அளிக்க வேண்டும். நெல்லை திருமண்டலம், டிடிடிஏ கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சம்பளத்தை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.”, என்று நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

Intro:நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் மற்றும் டிடிடிஏ ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் கீழ் நிர்வகிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுBody:நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் மற்றும் டிடிடிஏ ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் கீழ் நிர்வகிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழு தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று பிறப்பித்த உத்தரவு, நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் மற்றும் டிடிடிஏ ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இவர்களிடம் 2 வாரத்தில் அனைத்து ஆவணங்களையும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

நெல்லை திருமண்டலத்தில் 23.4.2017 முதல் நடைபெற்ற இடமாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும்.

திருமண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் அனைத்து நிர்வாகக்குழு முன் வைத்து நிர்வாகிகள் மேற்பார்வையில் முடிவெடுக்க வேண்டும்.

இதில் பிரச்சினை எழுந்தால் நிர்வாகிகளின் முடிவு இறுதியானதாக இருக்கும்.இடமாறுதல், நியமனங்களை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் மனு அளிக்க வேண்டும்.

நெல்லை திருமண்டலம், டிடிடிஏ கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சம்பளத்தை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட தொடர்பாக செப். 30-ல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.