ETV Bharat / state

சர்வதேச பேட்மிண்டன்: தங்கம் வென்ற மதுரை மங்கை! - Madurai girl

மதுரை: சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா தங்கம், இரண்டு வெள்ளி வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.

மதுரை பெண்
author img

By

Published : Jul 16, 2019, 2:58 PM IST

காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன நாட்டிலுள்ள தைபேயில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.

அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா
அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா

இதில், இந்தியா உட்பட அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்

இந்தியாவிலிருந்து 25-க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

காதுகேளாதோருக்கான சர்வதேச பாட்மிட்டன் போட்டி
காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி

இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெர்லின் அனிகா கலந்துகொண்டு காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்

காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன நாட்டிலுள்ள தைபேயில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.

அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா
அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா

இதில், இந்தியா உட்பட அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்

இந்தியாவிலிருந்து 25-க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

காதுகேளாதோருக்கான சர்வதேச பாட்மிட்டன் போட்டி
காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி

இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெர்லின் அனிகா கலந்துகொண்டு காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்
Intro:சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா

சீனாவில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாட்மிண்டன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார். மேலும் இரண்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
Body:சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா

சீனாவில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாட்மிண்டன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார். மேலும் இரண்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

காதுகேளாதோருக்கான சர்வதேச பாட்மிண்டன் போட்டி சீன நாட்டிலுள்ள தைபேயில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி துவங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது சர்வதேச அளவில் நடைபெறும் 5-ஆவது போட்டியாகும்.

அதில் இந்தியாவின் சார்பாக மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா கலந்து கொண்டார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்காவணி மூல வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் தைபேயில் நடைபெற்று வரும் காதுகேளாதோருக்கான 5-ஆவது சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க தேர்வாகியிருந்தார். சீனா நாட்டின் தைபேயில் கடந்த ஜூலை 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற காது கேளாத இளையோருக்கான பாட்மிண்டன் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியா உட்பட அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து 25-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தையார் ஜெயரட்சகன் கூறுகையில், ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் தனக்கு எதிராக விளையாடிய ஜெர்மனியைச் சேர்ந்த ஃபின்ஜா ரோசெண்டாகியை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிகக் கடுமையான போட்டியாக இருந்தபோதிலும் ஜெர்லினின் ஒவ்வொரு ஷாட்டும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அதே போன்று இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா-பசிபிக் பாட்மிண்டன் போட்டிகளிலும் ஜெர்லின் பதக்கங்களை வென்றார். வருகின்ற 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜெர்லின் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பயிற்சியாளர் சரவணன், உதவி பயிற்சியாளர் நவீன் ஆகியோரின் ஊக்கமும், அவ்வை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், நண்பர்களின் ஊக்கமும் உதவியும்தான் ஜெர்லின் சாதனைக்கு மிக முக்கியக் காரணம்' என்றார்.

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் 110 விதியின் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றால் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜெர்லின் அனிகா சர்வதேச போட்டியில் பதக்கங்களைக் குவித்துள்ளார் என்பது மிகவும் பாராட்டிற்குரியது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.