ETV Bharat / state

எலிபொறியை போல் சிக்கிய ஊழியர் - காவல்துறை விசாரணையில் அம்பலம்

மதுரை: வசூல் பணத்தை திருடி விட்டு, பழியை திருடர்கள் மீது போட நினைத்த ஊழியர் காவல்துறையினர் விசாரணையில் சிக்கிக் கொண்ட ருசிகர சம்பவம் மேலமாசி வீதியில் நடந்துள்ளது.

prakash
author img

By

Published : Aug 3, 2019, 5:57 PM IST

மதுரை மேலமாசி வீதி அடுத்த கந்தமுதலிதெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடையில் இருந்து மொத்தமாக பொருட்கள் வாங்கிய ஏஜெண்ட்களிடம் பணம் வசூல் செய்து வருமாறு பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் கூறியுள்ளார். இதையடுத்து அவரும் ஏஜெண்ட்கள் பாக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44ஆயிரத்தை வசூல் செய்து கடைக்கு திரும்பியுள்ளார்.

மதுரை மேலமாசி வீதி

இந்நிலையில் கடைக்கு வந்த பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் வசூல் பணத்தைக் கேட்டபோது, பணத்துடன் பேருந்து நிலையத்திற்கு வந்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நித்திஷ், உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, ஊழியரான பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பணத்திற்கு ஆசைப்பட்டு திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது நண்பரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிரகாஷ், நண்பர் பாலுமணி ஆகிய இருவரையும் கைது கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். ஊழியர் ஒருவர் பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்ற முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலமாசி வீதி அடுத்த கந்தமுதலிதெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடையில் இருந்து மொத்தமாக பொருட்கள் வாங்கிய ஏஜெண்ட்களிடம் பணம் வசூல் செய்து வருமாறு பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் கூறியுள்ளார். இதையடுத்து அவரும் ஏஜெண்ட்கள் பாக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44ஆயிரத்தை வசூல் செய்து கடைக்கு திரும்பியுள்ளார்.

மதுரை மேலமாசி வீதி

இந்நிலையில் கடைக்கு வந்த பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் வசூல் பணத்தைக் கேட்டபோது, பணத்துடன் பேருந்து நிலையத்திற்கு வந்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நித்திஷ், உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, ஊழியரான பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பணத்திற்கு ஆசைப்பட்டு திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது நண்பரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிரகாஷ், நண்பர் பாலுமணி ஆகிய இருவரையும் கைது கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். ஊழியர் ஒருவர் பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்ற முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தானே திருடி மாட்டிக் கொண்ட இளைஞர் - போலீசார் விசாரணையில் ருசிகரம்

தானே திருடிய பணத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் நாடகமாடிய இளைஞர் கையும் களவுமாக சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்.
Body:தானே திருடி மாட்டிக் கொண்ட இளைஞர் - போலீசார் விசாரணையில் ருசிகரம்

தானே திருடிய பணத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் நாடகமாடிய இளைஞர் கையும் களவுமாக சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்.

மதுரை மேலமாசி வீதி கந்தமுதலி தெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலெக்ட்ரானிக் மொத்த வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

நேற்றைய தினம் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தனது நிறுவனத்திடம் எலெக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிய சிறுசிறு கடைகளிலிருந்து பணம்வசூல் செய்துவிட்டு வருமாறு நித்திஷ் கூறிய நிலையில் பிரகாஷ் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 1 லட்சத்து 44ஆயிரம் ரூபாயை வசூல் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மதுரா கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்துவிட்டதாக தனது முதலாளியிடம் கண்ணீர் மல்க பிரகாஷ் கூறியதையடுத்து காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் போலிசார் பணத்தை இழந்ததாக கூறிய ஊழியர் பிரகாஷை அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். போலிசார் வழக்கம்போல தங்களது 'விசராணையை' தீவிரப்படுத்தியதால் கதிகலங்கிய பிரகாஷ் தானே பணத்தை எடுத்துவிட்டு வழிப்பறி நாடகம் நடத்தியதாகவும், அந்த பணத்தை தனது நண்பரான வில்லாபுரத்தை சேர்ந்த பாலுமணி என்பவரிடம் கொடுத்து அனுப்பி தனது கடனை அடைக்க சொன்னதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலுமணி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர்.

பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்றிய இளைஞர் போலிசாரின் விசாரணையில் உண்மையை ஒப்புகொண்டு சிறை சென்ற சம்பவம் காவலர்கள் மத்தியில் சுவாராஸ்யமாக மாறியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.