ETV Bharat / state

'பழைய ஓலைச்சுவடி, புத்தகங்களை தமிழுக்காகத் தாருங்கள்!' - துணைவேந்தர் கிருஷ்ணன் வேண்டுகோள்

author img

By

Published : Oct 2, 2019, 10:46 AM IST

மதுரை: பழைய ஓலைச்சுவடி, புத்தகங்களை தமிழுக்காக தரும்படி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

mdu

பழைய ஓலைச்சுவடிகள், பழைய புத்தங்கள் வைத்திருப்போர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் அவற்றை டிஜிட்டல்மயமாக்கியப் பின்னர் திரும்பத் தருகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு. கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

1960ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள மிகப்பழமையான நூல்களை மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்துறை டிஜிட்டல்மயமாக்கி-வருகிறது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் கு. கிருஷ்ணன், ''சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக பழமைவாய்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகம். 1966ஆம் ஆண்டிலேயே அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் சீரும் சிறப்பும் பெற்று நன்றாக வளர்ந்து பெரிய நிலையை அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரத்தின் பெயரில் தொடங்கப்பட்ட நூலகம் சிறந்த நூலகமாகக் கருதப்படுகிறது. இங்கே பழமைவாய்ந்த நூல்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றது என்றும் இந்த உலகத்தினுடைய பெருமையை மத்திய, மாநில அரசுகளின் நிதியால் ரூசா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, இங்குள்ள மிகப் பழமையான நூல்கள் டிஜிட்டல் வடிவம் பெற்றுவருவதாகவும் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தற்போது நூல்களை வாசிக்கின்ற பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலர் கைப்பேசியின் மூலம் நூல்களை தரவிறக்கம் செய்து படிக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இணையதளத்தின் மூலமாக அவரவர் வீட்டிற்கே நூல்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்ற அடிப்படையில் இப்பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைத் துணைவேந்தர் கு.கிருஷ்ணன்

பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என தெரிவித்துக் கொள்வதாக வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க:'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!

பழைய ஓலைச்சுவடிகள், பழைய புத்தங்கள் வைத்திருப்போர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் அவற்றை டிஜிட்டல்மயமாக்கியப் பின்னர் திரும்பத் தருகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு. கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

1960ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள மிகப்பழமையான நூல்களை மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்துறை டிஜிட்டல்மயமாக்கி-வருகிறது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் கு. கிருஷ்ணன், ''சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக பழமைவாய்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகம். 1966ஆம் ஆண்டிலேயே அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் சீரும் சிறப்பும் பெற்று நன்றாக வளர்ந்து பெரிய நிலையை அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரத்தின் பெயரில் தொடங்கப்பட்ட நூலகம் சிறந்த நூலகமாகக் கருதப்படுகிறது. இங்கே பழமைவாய்ந்த நூல்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றது என்றும் இந்த உலகத்தினுடைய பெருமையை மத்திய, மாநில அரசுகளின் நிதியால் ரூசா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, இங்குள்ள மிகப் பழமையான நூல்கள் டிஜிட்டல் வடிவம் பெற்றுவருவதாகவும் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தற்போது நூல்களை வாசிக்கின்ற பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலர் கைப்பேசியின் மூலம் நூல்களை தரவிறக்கம் செய்து படிக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இணையதளத்தின் மூலமாக அவரவர் வீட்டிற்கே நூல்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்ற அடிப்படையில் இப்பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைத் துணைவேந்தர் கு.கிருஷ்ணன்

பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என தெரிவித்துக் கொள்வதாக வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க:'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!

Intro:உங்களிடமுள்ள ஓலைச்சுவடியை தமிழுக்காக தாருங்கள் - துணைவேந்தர் கு.கிருஷ்ணன் வேண்டுகோள்

ஓலைச்சுவடிகள் வைத்திருப்போர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு வழங்கினால், அவற்றை டிஜிட்டல் படியெடுத்து திரும்பத் தருகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு.கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Body:உங்களிடமுள்ள ஓலைச்சுவடியை தமிழுக்காக தாருங்கள் - துணைவேந்தர் கு.கிருஷ்ணன் வேண்டுகோள்

ஓலைச்சுவடிகள் வைத்திருப்போர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு வழங்கினால், அவற்றை டிஜிட்டல் படியெடுத்து திரும்பத் தருகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு.கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 1960-ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள மிகப் பழமையான நூல்களை மதுரை காமராஜர் பல்கலைக் கழக தெ.பொ.மீ. நூலகத்துறை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் கு.கிருஷ்ணன், 'சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக பழமை வாய்ந்தது மதுரை காமராஜர் பல்கலைக் கழகம். கடந்த 1966-ஆம் ஆண்டிலேயே அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சீரும் சிறப்பும் பெற்று நன்றாக வளர்ந்து பெரிய நிலையை அடைந்துள்ளது.

தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் சிறந்த நூலகமாகக் கருதப்படுகிறது. இங்கே பழமை வாய்ந்த நூல்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த உலகத்தினுடைய பெருமையைக் மத்திய, மாநில அரசுகளின் நிதியால் ரூசா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, இங்குள்ள மிகப் பழமையான நூல்கள் டிஜிட்டல் வடிவம் பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் பொது நூலகத்துறையோடு இணைந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள முதன்மை வாய்ந்த நூல்களை தரம் பிரித்து, அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புத்தகங்கள் மட்டுமல்ல அங்கே இருக்கின்ற ஓலைச்சுவடிகளையும் டிஜிட்டல் வடிவத்தில் தற்போது படியெடுத்து வருகிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் அவற்றை அனைத்து பொதுமக்களம் தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக ஆன்லைனில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது நூல்களை வாசிக்கின்ற பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆனால் தங்களது செல்பேசிகள் மூலமாக பல்வேறு நூல்களை தரவிறக்கம் செய்து படிக்க விருப்பம் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையிலே நாங்கள் தமிழக அரசுடன் சேர்ந்து இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இணையதளத்தில் மூலமாக அவரவர் வீட்டிற்கே நூல்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்ற அடிப்படையில் இப்பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள மிகப் பழமையான நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை எங்களுக்கு வழங்கினால் அவற்றை டிஜிட்டல் செய்து திரும்ப வழங்கி விடுவோம். கடந்த 1960-ஆம் ஆண்டிற்கு முன்னர் உள்ள நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறோம். மேலும் தற்போது எங்களிடமிருக்கின்ற 30 பண்டல் ஓலைச்சுவடிகளையும் டிஜிட்டல் செய்கிறோம். அடுத்த மாதத்தில் இப்பணிகள் அனைத்தும் நிறைவு பெறும்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பல்கலைக் கழகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணமாக அமையும் என தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.