ETV Bharat / state

மதுரை கல்லூரி மாணவர்கள் அறப் போராட்டம்

author img

By

Published : Jan 31, 2020, 9:43 AM IST

மதுரை: கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கக்கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கல்லூரி மாணவர்கள் அறப் போராட்டம்
மதுரை கல்லூரி மாணவர்கள் அறப் போராட்டம்

மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக்கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காந்தியின் நினைவுதினத்தை அனுசரிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க தொடர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்கள், மசோதாக்கள் ஆகியவற்றிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தாங்கள் விடியவிடிய தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்திருந்த நிலையில், காவல் துறை சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி போராட்டத்திற்குச் செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனால் மைதானத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்
மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்

இதனையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைடுத்து 12 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்

மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக்கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காந்தியின் நினைவுதினத்தை அனுசரிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க தொடர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்கள், மசோதாக்கள் ஆகியவற்றிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தாங்கள் விடியவிடிய தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்திருந்த நிலையில், காவல் துறை சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி போராட்டத்திற்குச் செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனால் மைதானத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்
மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்

இதனையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைடுத்து 12 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

மதுரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறப் போராட்டம்
Intro:மதுரையில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற அறவழி போராட்டம். மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு.

நள்ளிரவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலிசார் குவிப்பு பரபரப்பு.

கல்லூரி மாணவர்கள் சார்பில் மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய பெண்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். Body:மதுரையில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற அறவழி போராட்டம். மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு.

நள்ளிரவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலிசார் குவிப்பு பரபரப்பு.

கல்லூரி மாணவர்கள் சார்பில் மதுரை அரசரடி இறையியல் கல்லூரி மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய பெண்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காந்தியின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க தொடர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மற்றும் அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போராட்டத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திருத்தங்கள், புதிய நடைமுறைகள், மசோதாக்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இரவு முழுவதிலும் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என கூறி போலிசார் போராட்டத்திற்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தியதால் மைதானத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 12 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

இந்த அறவழி போராட்டமானது தொடர்ந்து இரவு பகலாக நடைபெறும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்த போராட்டத்தை மதுரையிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றனர். நாங்கள் ஆதரவு தெரிவித்து வருவகிறோம். தமிழகத்தின் தலைநகரில் நடைபெற்ற அறப்போராட்டத்தை போன்று போராட்டமும் நடைபெறும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.