மதுரை கீழகுயில்குடி பகுதியில் உள்ள சீனிவாச காலனியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த டாடா நெக்ஸன் காரின் மீது இன்று(அக்.28) அதிகாலை 3.20 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடியது எதிர்வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகிள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து நாகமலைபுதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அலெக்ஸ் என்பவருக்கு சில மாதங்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் அதன்காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது ஏதேனும் வேறு ஏதேனும் காரணமா எனவும் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:
சமூக வலைதளத்தில் பள்ளி மாணவிகளுக்கு வலைவிரித்த காதல் ரோமியோ!