ETV Bharat / state

கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Nov 3, 2020, 7:44 PM IST

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற காளையார் கோயில் வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
கோயில் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ காளையார் கோயில் கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு இடமாக உள்ளது. இதில் அருள்மிகு வாள்மேல் நடந்த அம்மன் கோயிலும், அதன் முன்பாக அம்மன் குளம் என்ற குடிநீர் ஊரணியும் உள்ளது. இப்பகுதியில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் இந்த ஊரணியை சுற்றியே நடக்கும்.

இந்நிலையில் தொண்டி பிரதான சாலையில் அமைந்துள்ள இக்கோயிலை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் 40க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதில் இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. மேலும், இறைச்சிக் கழிவுகள் அங்குள்ள குடிநீர் ஊரணியில் கொட்டப்படுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முன்னர் திடலாக இருந்த இந்த இடம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் ” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பஞ்சாயத்து யூனியன் தீர்மானத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும், குருபூஜை போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பஞ்சாயத்து யூனியன் தீர்மானத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய காளையார் கோயில் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: 'ஆன்லைன் கேமிங்'க்குத் தடை கோரிய வழக்கு - பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகைக்கு நோட்டீஸ்!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ காளையார் கோயில் கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு இடமாக உள்ளது. இதில் அருள்மிகு வாள்மேல் நடந்த அம்மன் கோயிலும், அதன் முன்பாக அம்மன் குளம் என்ற குடிநீர் ஊரணியும் உள்ளது. இப்பகுதியில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் இந்த ஊரணியை சுற்றியே நடக்கும்.

இந்நிலையில் தொண்டி பிரதான சாலையில் அமைந்துள்ள இக்கோயிலை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் 40க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதில் இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. மேலும், இறைச்சிக் கழிவுகள் அங்குள்ள குடிநீர் ஊரணியில் கொட்டப்படுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முன்னர் திடலாக இருந்த இந்த இடம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் ” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பஞ்சாயத்து யூனியன் தீர்மானத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும், குருபூஜை போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பஞ்சாயத்து யூனியன் தீர்மானத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய காளையார் கோயில் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: 'ஆன்லைன் கேமிங்'க்குத் தடை கோரிய வழக்கு - பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகைக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.