ETV Bharat / state

நிதி மோசடி வழக்கு; முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 8:45 PM IST

Neomax: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிதி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையை தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி, தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன. நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1,000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம்.

மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம். இந்த நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு, அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் 2,249.565 ஏக்கருக்கான அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.

நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்யத் தயாராக உள்ளன.

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடக்க நிலையில்தான் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற 6 மாதங்கள் தேவைப்படும். 557 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள், நிர்வாகிகள் தற்போதுதான் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9,428 சொத்து விபரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்து விசாரணை செய்வது தேவையற்றது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “தங்கள் நிறுவனத்தின் முழு தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் உள்ளது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் விபரங்கள், மேலும் நிலங்கள், வீட்டுமனை விபரங்களும் உள்ளன. மேலும், பணப்பரிவர்த்தனை, வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது” என தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம்; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையை தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி, தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன. நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1,000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம்.

மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம். இந்த நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு, அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் 2,249.565 ஏக்கருக்கான அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.

நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்யத் தயாராக உள்ளன.

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடக்க நிலையில்தான் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற 6 மாதங்கள் தேவைப்படும். 557 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள், நிர்வாகிகள் தற்போதுதான் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9,428 சொத்து விபரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்து விசாரணை செய்வது தேவையற்றது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “தங்கள் நிறுவனத்தின் முழு தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் உள்ளது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் விபரங்கள், மேலும் நிலங்கள், வீட்டுமனை விபரங்களும் உள்ளன. மேலும், பணப்பரிவர்த்தனை, வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது” என தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம்; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.