ETV Bharat / state

லுக் அவுட் நோட்டீஸூக்கு எதிரான சுப.உதயகுமார் வழக்கு: நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 4:37 PM IST

Lookout Notice: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு எதிராக குமரி மாவட்ட போலீசார் வழங்கிய லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Bench of mhc orders cancellation of lookout notice against Udayakumar
உதயகுமார் மீதான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த சுப.உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக கடலோர மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்கள் மாதக் கணக்கில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

அந்த வகையில், தொடர்ந்து அணு உலைக்கு எதிராகவும், அணு சக்தி கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகிறேன். அணுசக்தி எதிர்ப்புக் குழு என்ற அமைப்பு மூலம் மக்களைத் திரட்டி, அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும், என் மீதும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து திரும்பப்பெற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வழக்குகளை நீதிமன்றம் திரும்பப் பெற வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகும் கூட, வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை.

இந்நிலையில், 2022ஆம் அண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்தேன். அதைத் தொடர்ந்து, நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இதனால் எனக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நான் சிங்கப்பூர் செல்வதற்கு விண்ணப்பித்தபோது தான், எனக்கு மீண்டும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருப்பது தெரியவந்தது. எனவே எனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையைத் திரும்பெற உத்தரவிட வேண்டும்” எனக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் இன்று (டிச.18) விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “கூடங்ககுளம் அணு உலைக்கு எதிரான வழக்குகள் தான் உதயகுமார் மீது இருந்தது. அவர் கடுமையான குற்றவாளி அல்ல. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது” எனக் கூறி லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “வெள்ள நிவாரணத்தில் அரசுக்கு துணை நிற்போம்” - அண்ணாமலை உறுதி!

கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த சுப.உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக கடலோர மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்கள் மாதக் கணக்கில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

அந்த வகையில், தொடர்ந்து அணு உலைக்கு எதிராகவும், அணு சக்தி கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகிறேன். அணுசக்தி எதிர்ப்புக் குழு என்ற அமைப்பு மூலம் மக்களைத் திரட்டி, அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும், என் மீதும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து திரும்பப்பெற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வழக்குகளை நீதிமன்றம் திரும்பப் பெற வழிகாட்டுதல்கள் வழங்கிய பிறகும் கூட, வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை.

இந்நிலையில், 2022ஆம் அண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்தேன். அதைத் தொடர்ந்து, நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இதனால் எனக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நான் சிங்கப்பூர் செல்வதற்கு விண்ணப்பித்தபோது தான், எனக்கு மீண்டும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருப்பது தெரியவந்தது. எனவே எனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையைத் திரும்பெற உத்தரவிட வேண்டும்” எனக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் இன்று (டிச.18) விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “கூடங்ககுளம் அணு உலைக்கு எதிரான வழக்குகள் தான் உதயகுமார் மீது இருந்தது. அவர் கடுமையான குற்றவாளி அல்ல. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது” எனக் கூறி லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “வெள்ள நிவாரணத்தில் அரசுக்கு துணை நிற்போம்” - அண்ணாமலை உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.