ETV Bharat / state

மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!

author img

By

Published : Jul 25, 2019, 3:07 PM IST

மதுரை: அதிவேகமாக வந்த சிற்றுந்து மோதி மகன் கண்முன்னே தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (45) மற்றும் அவருடைய மகன் லோகேஷ்(17) ஆகிய இருவரும், மதுரைக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகத்தில் எதிரே வந்த தனியார் சிற்றுந்து மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி பலியானார். காயமடைந்த மகன் லோகேஷ் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை
மகன் கண்முன்னே தாய் மரணம்!

மேலும் விபத்து நடந்ததும் உடனடியாக வரவேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்ததும் விஜயலட்சுமி மரணமடைந்ததற்கு ஒரு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (45) மற்றும் அவருடைய மகன் லோகேஷ்(17) ஆகிய இருவரும், மதுரைக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகத்தில் எதிரே வந்த தனியார் சிற்றுந்து மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி பலியானார். காயமடைந்த மகன் லோகேஷ் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை
மகன் கண்முன்னே தாய் மரணம்!

மேலும் விபத்து நடந்ததும் உடனடியாக வரவேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக வந்ததும் விஜயலட்சுமி மரணமடைந்ததற்கு ஒரு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Intro:அதிவேகமாக வந்த மினி பேருந்து மோதி பெண் பலி மகன் படுகாயம்

மதுரையில் அதிவேகமாக வந்த மினி பேருந்து மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்பெண்ணின் மகன் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.Body:அதிவேகமாக வந்த மினி பேருந்து மோதி பெண் பலி மகன் படுகாயம்

மதுரையில் அதிவேகமாக வந்த மினி பேருந்து மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்பெண்ணின் மகன் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் அவருடைய மகன் லோகேஷ் (17) மீது தனியார் மினி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி (45) பலியானார்

படுகாயமடைந்த மகன் லோகேஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை.

பலியான விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் ஹவுஸ் கீப்பிங் ஆக பணிபுரிந்து வருகிறார். விபத்து நடந்ததும் உடனடியாக வரவேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் மிகத் தாமதமாக வந்ததும் விஜயலட்சுமி மரணமடைந்ததற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.