ETV Bharat / state

குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட விவகாரம்: பெற்றோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டதையடுத்து, குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக 75,000 ரூபாய் 4 வார காலத்திற்குள் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jun 24, 2021, 8:15 AM IST

Court
Court

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25ஆம் தேதி, எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது.

ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையிலிருந்து ஊசியைப் எடுக்க முயன்ற போது செவிலியரின் கவனக்குறைவால் இடதுகை கட்டைவிரல் வெட்டப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த எனது மனைவி மற்றும் அவரது தாயார் மருத்துவர்களை அழைத்தனர்.

அதைத் தொடர்ந்து இடது கை கட்டை விரலை சேர்ப்பதற்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அதற்கான பலன்கள் எதுவும் இல்லை.

துரித நடவடிக்கை எடுக்காத மருத்துவமனை நிர்வாகம்

கட்டை விரலை சேர்ப்பதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தையின் கட்டை விரல் சேர்க்க முடியாமல் போனது. மருத்துவமனையில் சுமார் 1,200 உள்நோயாளிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு குறைந்த அளவிலான செவிலியர் உள்ளதால் இது போன்ற கவனக்குறைவு ஏற்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரலை இழந்ததற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும், மேலும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டை விரலைப் பொருத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக 75,000 ரூபாய் 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

குழந்தையின் கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில், பச்சிளம் குழந்தையை உடனடியாக நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'கோயிலின் சொத்து விவரங்கள் இணையத்தில் முழுமையாக ஏற்றும்வரை பொறுமை காக்க வேண்டும்'

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25ஆம் தேதி, எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது.

ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையிலிருந்து ஊசியைப் எடுக்க முயன்ற போது செவிலியரின் கவனக்குறைவால் இடதுகை கட்டைவிரல் வெட்டப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த எனது மனைவி மற்றும் அவரது தாயார் மருத்துவர்களை அழைத்தனர்.

அதைத் தொடர்ந்து இடது கை கட்டை விரலை சேர்ப்பதற்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அதற்கான பலன்கள் எதுவும் இல்லை.

துரித நடவடிக்கை எடுக்காத மருத்துவமனை நிர்வாகம்

கட்டை விரலை சேர்ப்பதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தையின் கட்டை விரல் சேர்க்க முடியாமல் போனது. மருத்துவமனையில் சுமார் 1,200 உள்நோயாளிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு குறைந்த அளவிலான செவிலியர் உள்ளதால் இது போன்ற கவனக்குறைவு ஏற்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரலை இழந்ததற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும், மேலும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டை விரலைப் பொருத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக 75,000 ரூபாய் 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

குழந்தையின் கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில், பச்சிளம் குழந்தையை உடனடியாக நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'கோயிலின் சொத்து விவரங்கள் இணையத்தில் முழுமையாக ஏற்றும்வரை பொறுமை காக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.