ETV Bharat / state

அரசு வழக்கறிஞர் நல்ல தகுதி உடையவராக இருக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்து - சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள்

மதுரை: அரசுக்காக வழக்காட கூடிய வழக்கறிஞர் நல்ல தகுதி உடையவராகவும் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் வழக்கில் அரசுக்கு வெற்றியைத் தேடித் தர கூடிய எண்ணத்தில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

mdu
mdu
author img

By

Published : Jun 7, 2021, 7:36 PM IST

மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு மே 13ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன் படி தமிழ்நாடு அரசுக்காக வழக்காட 17 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆனால், உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை முறையாக பின்பற்றி வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில், இது குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் அரசாணையை வெளியிடாமல் 2019ஆம் ஆண்டு புதிய அரசாணையை அப்போதைய அரசு வெளியிட்டது. தற்போதும் அரசியல் நபர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

எனவே அரசு புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் வெளிப்படைத்தன்மையாகவும், அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகள் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வழக்கறிஞர்களின் முந்தைய விபரங்கள் காவல்துறை இணையதளத்தில் வெளியிடவும், வழக்கறிஞர்களின் படிப்பு தகுதி குறித்த விவரங்களை தமிழ்நாடு பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 7) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கூடுதல் அரசு வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, தற்போது வழக்கறிஞர்கள் நியமனம் முறைப்படி உயர்நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றியே நியமனங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், அரசுக்காக வழக்காட கூடிய வழக்கறிஞரை நல்ல தகுதி உடையவராக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல வழக்கறிஞர்கள் ஏதோ ஊதியத்திற்காக வேலை செய்கிறோம் என்று இல்லாமல் இந்த வழக்கில் அரசுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் வாதாட கூடியவராக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் வழக்கறிஞர்களை தேர்வு செய்யலாம் என்று கூறி வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு மே 13ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன் படி தமிழ்நாடு அரசுக்காக வழக்காட 17 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆனால், உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை முறையாக பின்பற்றி வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில், இது குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் அரசாணையை வெளியிடாமல் 2019ஆம் ஆண்டு புதிய அரசாணையை அப்போதைய அரசு வெளியிட்டது. தற்போதும் அரசியல் நபர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

எனவே அரசு புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் வெளிப்படைத்தன்மையாகவும், அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகள் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வழக்கறிஞர்களின் முந்தைய விபரங்கள் காவல்துறை இணையதளத்தில் வெளியிடவும், வழக்கறிஞர்களின் படிப்பு தகுதி குறித்த விவரங்களை தமிழ்நாடு பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 7) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கூடுதல் அரசு வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, தற்போது வழக்கறிஞர்கள் நியமனம் முறைப்படி உயர்நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றியே நியமனங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், அரசுக்காக வழக்காட கூடிய வழக்கறிஞரை நல்ல தகுதி உடையவராக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல வழக்கறிஞர்கள் ஏதோ ஊதியத்திற்காக வேலை செய்கிறோம் என்று இல்லாமல் இந்த வழக்கில் அரசுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் வாதாட கூடியவராக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் வழக்கறிஞர்களை தேர்வு செய்யலாம் என்று கூறி வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.