ETV Bharat / state

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியை பார்வையிட்ட ஸ்டாலின்!

author img

By

Published : Mar 29, 2019, 7:48 PM IST

மதுரை: மதுரையில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மனித சங்கிலியில் பேரணியை பார்வையிட்ட ஸ்டாலின்

நுாறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார்.

100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியை பாரா்வையிட்ட ஸ்டாலின்

இந்த பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக சிவகங்கைக்கு தேர்தல் பரப்புரைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த பேரணியை பார்த்த அவர், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி கல்லூரி மாணவர்களுடன் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து சிறிது நேரம் உரையாற்றினார். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

நுாறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார்.

100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியை பாரா்வையிட்ட ஸ்டாலின்

இந்த பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக சிவகங்கைக்கு தேர்தல் பரப்புரைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த பேரணியை பார்த்த அவர், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி கல்லூரி மாணவர்களுடன் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து சிறிது நேரம் உரையாற்றினார். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
29.03.2019


*நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின்*

மதுரையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி மதுரை கே.கே.நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக சிவகங்கைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலினை பார்த்த  மாணவ-மாணவிகள் சார் சார் என அவரை அழைத்தனர். உடனே பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி கல்லூரி மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாற்றினார். அப்போது 100 சதவீத வாக்கு அளிப்பது குறித்து பேசிவிட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Visual send in ftp
Visual name : TN_MDU_2_29_STALIN STUDENTS VISUAL_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.