மதுரை மாவட்டம் மணி நகரம் பகுதியிலுள்ள தேவி திரையரங்க வளாக அடுக்குமாடி கட்டடத்தில் வசித்துவருபவர் ரங்கநாதன் (62). இவர் மதுரை வெங்கலக் கடைத் தெருவில் நகைக்கடை நடத்திவருகிறார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் போதிய வருமானமின்றி தவித்து வந்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது நகைக்கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பிக்கொடுக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாள்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்த ரங்கநாதன் இன்று (அக்.09) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திலகர் திடல் காவல் துறையினர், ரங்கநாதன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திலகர் திடல் காவல் துறையினர், தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பப் பிரச்னையால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை