ETV Bharat / state

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் - உயர்நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு

author img

By

Published : Sep 8, 2022, 12:24 PM IST

கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் எந்த அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது ஜாதிய ரீதியான வன்மங்கள் இருக்கக் கூடாது என கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

கோவில் திருவிழாக்களில் கடுமையான நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கோவில் திருவிழாக்களில் கடுமையான நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.

மேலும் ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

மேலும் பொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பரிந்துரை

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.

மேலும் ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

மேலும் பொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.