ETV Bharat / state

சுங்கக் கட்டணங்களை ரத்துசெய்யக்கோரிய வழக்கு: அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு - சுங்கக் கட்டணம் ரத்து செய்யக்கோரிய வழக்கு

மதுரை: 144 தடை உத்தரவைத் தொடர்ந்து, சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கோரிய வழக்கில் அரசு உரிய முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  சுங்கக் கட்டணம் ரத்து செய்யக்கோரிய வழக்கு  high court give order to tamilnadu govt to take perfect action on toll fee
சுங்கக் கட்டணங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு: அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு
author img

By

Published : Mar 25, 2020, 8:24 AM IST

கரோனா பாதிப்பு எதிரொலியாகத் தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு வரும் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூல்செய்யப்பட்டது. இந்தச் சுங்கக் கட்டண வசூல் மையங்களில் ஒவ்வொரு வாகனமும் நின்று நின்று வருவதால் நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாகச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குரைஞர் ராஜகோபால் மனு தாக்கல்செய்தார்.

இம்மனு நீதிபதிகள் பிரகாஷ், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞரிடம் இது சம்பந்தமாக அரசு உடனடியாக பரிசீலனைசெய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: வழக்கறிஞர்களின் குடும்பம் பட்டினி சாவை சந்திக்கும் - பிரதமருக்கு கடிதம்

கரோனா பாதிப்பு எதிரொலியாகத் தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு வரும் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூல்செய்யப்பட்டது. இந்தச் சுங்கக் கட்டண வசூல் மையங்களில் ஒவ்வொரு வாகனமும் நின்று நின்று வருவதால் நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாகச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குரைஞர் ராஜகோபால் மனு தாக்கல்செய்தார்.

இம்மனு நீதிபதிகள் பிரகாஷ், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞரிடம் இது சம்பந்தமாக அரசு உடனடியாக பரிசீலனைசெய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: வழக்கறிஞர்களின் குடும்பம் பட்டினி சாவை சந்திக்கும் - பிரதமருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.