ETV Bharat / state

கிரிமினல் வழக்கில் தொடர்புடைய இளைஞருக்கு காவலர் பணி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

author img

By

Published : Aug 5, 2023, 4:03 PM IST

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக கூறி காவலர் பணி வழங்க முடியாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு காவலர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தென்காசி மாவட்டம் சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த அருண்காந்த் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் பி.காம் (சிஏ) படிப்பை 2018 ஆம் ஆண்டு முடித்தேன். நான் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். 2022ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அன்று கிரேடு II போலீஸ் பதவிக்கான பொது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உடனடியாக 16ஆம் தேதி அன்று கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்தேன். நான் 2022ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அன்று எழுத்துத் தேர்வில் பங்கேற்று அதில் தேர்ச்சிப் பெற்றேன். எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மொத்தம் 89 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து நான் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டேன். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்தது. நான் காவலராக பணியில் சேர ஆர்வமுடன் இருந்தேன்.

இந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி, நான் ஒரு கிரிமினல் வழக்கில் தொடர்புடையதாகக் குறிப்பிட்டு, என்னை காவலர் பயிற்சிக்கு அழைக்கவில்லை. இதன் காரணமாக பணி நியமனம் வழங்க இயலாது என கூறிவிட்டனர். இது குறித்து விசாரித்தததில், என் மீதான வழக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடந்தது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பியவாறு , சிலர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்குச் சென்றனர்.

அவர்களை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் மனுதாரர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை குறிப்பிட்டு எனக்கு காவல் பணி வழங்கவில்லை. ஆனால் நீட் போராட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குருவராஜ் என்பவர் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். 2022 பிப். 01 ஆம் தேதி அன்று இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

அவர் எல்லை பாதுகாப்பு படையில் வேலைக்குச் சேர்ந்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வன்முறைச் செயலிலும் ஈடுபடவில்லை. அதற்கு பின் நான் காவலர் பணிக்கு தேர்வாகினேன். ஆனால் இந்த நீட் போராட்ட வழக்கு உள்ளதாக கூறி எனக்கு பணி வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனவே, போராட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி வழங்க இயலாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், இந்த போராட்ட வழக்கு முன்னரே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமைதியான வழியில் உரிமைக்காக சட்டப்படி போராட உரிமை உள்ளது.

மேலும், நீட் போராட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால், காவலர் பணி வழங்க இயலாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மனுதாரருக்கு காவலர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முதுமலை வரும் குடியரசுத் தலைவர் முர்மு: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

தென்காசி மாவட்டம் சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த அருண்காந்த் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் பி.காம் (சிஏ) படிப்பை 2018 ஆம் ஆண்டு முடித்தேன். நான் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். 2022ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அன்று கிரேடு II போலீஸ் பதவிக்கான பொது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உடனடியாக 16ஆம் தேதி அன்று கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்தேன். நான் 2022ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அன்று எழுத்துத் தேர்வில் பங்கேற்று அதில் தேர்ச்சிப் பெற்றேன். எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மொத்தம் 89 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து நான் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டேன். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்தது. நான் காவலராக பணியில் சேர ஆர்வமுடன் இருந்தேன்.

இந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி, நான் ஒரு கிரிமினல் வழக்கில் தொடர்புடையதாகக் குறிப்பிட்டு, என்னை காவலர் பயிற்சிக்கு அழைக்கவில்லை. இதன் காரணமாக பணி நியமனம் வழங்க இயலாது என கூறிவிட்டனர். இது குறித்து விசாரித்தததில், என் மீதான வழக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடந்தது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பியவாறு , சிலர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்குச் சென்றனர்.

அவர்களை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் மனுதாரர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை குறிப்பிட்டு எனக்கு காவல் பணி வழங்கவில்லை. ஆனால் நீட் போராட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குருவராஜ் என்பவர் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். 2022 பிப். 01 ஆம் தேதி அன்று இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

அவர் எல்லை பாதுகாப்பு படையில் வேலைக்குச் சேர்ந்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வன்முறைச் செயலிலும் ஈடுபடவில்லை. அதற்கு பின் நான் காவலர் பணிக்கு தேர்வாகினேன். ஆனால் இந்த நீட் போராட்ட வழக்கு உள்ளதாக கூறி எனக்கு பணி வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனவே, போராட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி வழங்க இயலாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், இந்த போராட்ட வழக்கு முன்னரே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமைதியான வழியில் உரிமைக்காக சட்டப்படி போராட உரிமை உள்ளது.

மேலும், நீட் போராட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால், காவலர் பணி வழங்க இயலாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மனுதாரருக்கு காவலர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முதுமலை வரும் குடியரசுத் தலைவர் முர்மு: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.