ETV Bharat / state

அரசியல் தலையீட்டால் ஊராட்சி செயலர் பணி கிடைக்கவில்லை - மாற்றுத்திறனாளி மாணவர் புகார்! - urseri handicapped student complaint for Secretary of the Panchayat job

மதுரை: மாற்றுத்திறனாளிக்கான பதவியை, அரசியல் தலையீட்டால் பொதுப்பிரிவுக்கு மாற்றிய அலுவலர்கள் மீது நடவடிக்க எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர் புகாரளித்துள்ளார்.

Handicapped student complaint against Political interference does'nt get Secretary of the Panchayat job
author img

By

Published : Nov 13, 2019, 7:57 PM IST

Updated : Nov 13, 2019, 8:20 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் தமிழ்வளவன். இவர் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். தமிழ்வளவன் பிஏ பட்டப்படிப்பு வரை படித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்காக ஒதுக்கப்பட்ட ஊர்சேரி கிராமத்தில் காலியாக இருந்த ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். பின்னர், பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற செயலர் பணிக்கான நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தகுதியும் பெற்றுள்ளார்.

இதையடுத்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு ஊராட்சிகளில், ஐந்து ஊராட்சிகளில் செயலர் பணிக்கான நபர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஊர்சேரி ஊராட்சியில் மட்டும் செயலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னை அந்தப் பணியில் நியமிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வளவன், ”ஊர்சேரியில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் பணியிடத்தை நிரப்புவதில், அரசியல் தலையீடு இருப்பதாக கருதுகிறேன். மேலும், இப்பணியை வழங்குவதற்காக என்னிடம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டார்கள். நான் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால், மாற்றுத்திறனாளி பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சி செயலர் பணியை, பொதுப்பிரிவுக்கு மாற்றி காலிப்பணியிடமாக அறிவித்து புதிதாக நேர்காணல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

தமிழ்வளவன் பேட்டி

எனவே எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சி செயலர் பதவியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: தையல் மிஷினை மிதித்துக் காட்டு... மாற்றுத் திறனாளியை வஞ்சித்த அலுவலர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் தமிழ்வளவன். இவர் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். தமிழ்வளவன் பிஏ பட்டப்படிப்பு வரை படித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்காக ஒதுக்கப்பட்ட ஊர்சேரி கிராமத்தில் காலியாக இருந்த ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். பின்னர், பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற செயலர் பணிக்கான நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தகுதியும் பெற்றுள்ளார்.

இதையடுத்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு ஊராட்சிகளில், ஐந்து ஊராட்சிகளில் செயலர் பணிக்கான நபர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஊர்சேரி ஊராட்சியில் மட்டும் செயலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னை அந்தப் பணியில் நியமிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்வளவன், ”ஊர்சேரியில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் பணியிடத்தை நிரப்புவதில், அரசியல் தலையீடு இருப்பதாக கருதுகிறேன். மேலும், இப்பணியை வழங்குவதற்காக என்னிடம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டார்கள். நான் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால், மாற்றுத்திறனாளி பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சி செயலர் பணியை, பொதுப்பிரிவுக்கு மாற்றி காலிப்பணியிடமாக அறிவித்து புதிதாக நேர்காணல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

தமிழ்வளவன் பேட்டி

எனவே எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சி செயலர் பதவியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: தையல் மிஷினை மிதித்துக் காட்டு... மாற்றுத் திறனாளியை வஞ்சித்த அலுவலர்!

Intro:*மதுரையில் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பதவியை சில அரசியல் பிரமுகரின் தலையீட்டால் மீண்டும் காலிப்பணியிடம் அறிவித்ததாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர் புகார்*Body:*மதுரையில் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பதவியை சில அரசியல் பிரமுகரின் தலையீட்டால் மீண்டும் காலிப்பணியிடம் அறிவித்ததாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர் புகார்*



மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் தமிழ்வளவன் என்பவருக்கு பிறந்ததில் இருந்தே கண்பார்வை இழந்துள்ளார், மாற்றுத்திறனாளி இவர் பிஏ பட்டப்படிப்பு வரை படித்த நிலையில் ஊர்சேரி கிராமத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்,இந்நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி செயலர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் பங்கேற்று உள்ளார், இந்த நிலையில் அவர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு ஊராட்சிகளில் 5 ஊராட்சி செயலர் பணி நிறைவு பெற்ற நிலையில் ஊர் சேரி போது மட்டும் செயலர் நிரப்பாமல் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தார்,இந்த நிலையில் மாற்றுத்திறனாளிக்கு என ஒதுக்கப்பட்ட ஊர்சேரி கிராமத்தில் இருந்த காலி பணியிடத்தை புதிதாக மாற்றி மீண்டும் நேர்காணல் நடத்துவதாக,இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் பணி வழங்குவதற்கு தன்னிடம் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும் அதற்கு கொடுக்க மறுத்த காரணத்தால் மாற்றுத்திறனாளி பிரிவில் இருந்து அதனை பொதுப்பிரிவு என மாற்றி புதியதாக நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உடனடியாக எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சி செயலர் பதவியை வழங்க வேண்டும் என இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

Conclusion:
Last Updated : Nov 13, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.