ETV Bharat / state

நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச். ராஜாவின் முன்பிணை மனு தள்ளுபடி - H raja bail petition dismissed

நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்பிணை கோரியிருந்த ஹெச். ராஜாவின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடிசெய்துள்ளது.

நீதிமன்றம் குறித்த அவதூறு வழக்கு
நீதிமன்றம் குறித்த அவதூறு வழக்கு
author img

By

Published : Jul 19, 2021, 5:06 PM IST

மதுரை: பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உள்பட பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றப்பத்திரிகையில் என்னை தலைமறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. எனவே இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன்பிணை வழங்க வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்பிணை மனு தள்ளுபடி

இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றம், காவல் துறையினரை ஹெச். ராஜா அவதூறாகப் பேசியுள்ளார், எனவே அவர் முன்பிணை மனு மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இதையும் படிங்க: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

மதுரை: பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உள்பட பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றப்பத்திரிகையில் என்னை தலைமறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. எனவே இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன்பிணை வழங்க வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்பிணை மனு தள்ளுபடி

இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றம், காவல் துறையினரை ஹெச். ராஜா அவதூறாகப் பேசியுள்ளார், எனவே அவர் முன்பிணை மனு மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இதையும் படிங்க: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.