மதுரையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கடந்த 2013ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் மாதாந்திர தவணை மூலம் பெற்ற பணத்தை பொதுமக்களுக்கு திருப்பி செலுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழு 250 கோடி ரூபாய் லஞ்சம் கேட்பதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ், ஜனார்த்தன், அருண்குமார், உமாசங்கர் ஆகிய 4 பேர் மீது மதுரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாகரன் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தல்லாகுளம் காவல்துறையினர் அந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை நீதிபதி குறித்து பொய்யான ஆடியோ - 4 பேர் மீது வழக்குப் பதிவு! - Four arrested for raising false allegations against Retired Judge
மதுரை: நிதி நிறுவன மோசடி விவகாரம் குறித்து விசாரிக்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதி குறித்த பொய்யான ஆடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கடந்த 2013ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் மாதாந்திர தவணை மூலம் பெற்ற பணத்தை பொதுமக்களுக்கு திருப்பி செலுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழு 250 கோடி ரூபாய் லஞ்சம் கேட்பதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ், ஜனார்த்தன், அருண்குமார், உமாசங்கர் ஆகிய 4 பேர் மீது மதுரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாகரன் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தல்லாகுளம் காவல்துறையினர் அந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.