ETV Bharat / state

பன்னாட்டு கடல் எல்லையை கடந்து செல்லக் கூடாதென மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- நீதிபதிகள் வலியுறுத்தல்!

author img

By

Published : Mar 5, 2021, 6:46 AM IST

மதுரை: பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்லக் கூடாது என மத்திய- மாநில அரசுகள் இந்திய மீனவர்கள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

"Fishermen should be made aware not to cross the international maritime border" - Judges insist!
“பன்னாட்டு கடல் எல்லையை கடந்து செல்லக் கூடாதென மீனவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - நீதிபதிகள் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தமிழ்நாடு மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள், மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீனவர்களை காக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து, 2013 மே 3ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஏக மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீது மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் கூட கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் போதிய சட்ட உதவிகளும் வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாடு மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை. தமிழ்நாடு மீனவர்கள் 1,500 நபர்களை இலங்கை கப்பல் படையினர் கொலை செய்துள்ளது, அது தொடர்பாக இதுவரை இந்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது. இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு, தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர்ந்து இத்தகைய மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரி 18ஆம் தேதியன்று மீன் பிடிப்பதற்காக வாடகை படகு எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந் ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அடித்து துன்புறுத்தி, பச்சைப் படுகொலை செய்து, கடலில் வீசியுள்ளனர்.

நான்கு இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த இந்திய மீனவர்கள் 4 குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், “இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் குழு அமைத்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டும் போதே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய- மாநில அரசுகள் இந்திய மீனவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடல் எல்லையை கடக்காமல் மீன் பிடிப்பது என்பது குறித்து உரிய வழிமுறைகளை வகுத்து, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பன்னாட்டு கடல் எல்லையை கடக்கும் போது நவீன சாதனங்கள் மூலம் எச்சரிக்கை மணி எழுப்பும் வகையில் தேவையான நவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்கி பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : விருதுநகரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தமிழ்நாடு மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள், மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீனவர்களை காக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து, 2013 மே 3ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஏக மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீது மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான உணவு, தண்ணீர் கூட கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் போதிய சட்ட உதவிகளும் வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாடு மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை. தமிழ்நாடு மீனவர்கள் 1,500 நபர்களை இலங்கை கப்பல் படையினர் கொலை செய்துள்ளது, அது தொடர்பாக இதுவரை இந்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது. இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு, தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர்ந்து இத்தகைய மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரி 18ஆம் தேதியன்று மீன் பிடிப்பதற்காக வாடகை படகு எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந் ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அடித்து துன்புறுத்தி, பச்சைப் படுகொலை செய்து, கடலில் வீசியுள்ளனர்.

நான்கு இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த இந்திய மீனவர்கள் 4 குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், “இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் குழு அமைத்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டும் போதே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய- மாநில அரசுகள் இந்திய மீனவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடல் எல்லையை கடக்காமல் மீன் பிடிப்பது என்பது குறித்து உரிய வழிமுறைகளை வகுத்து, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பன்னாட்டு கடல் எல்லையை கடக்கும் போது நவீன சாதனங்கள் மூலம் எச்சரிக்கை மணி எழுப்பும் வகையில் தேவையான நவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்கி பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : விருதுநகரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.