ETV Bharat / state

​​​​​​​மீனவர்கள் காணாமல்போன விவகாரம்: வெளியுறவுத் துறை பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Oct 21, 2019, 10:11 PM IST

மதுரை: ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரிய விசாரணையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத் துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நலத் துறை இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் நம்புதாளை. இப்பகுதியைச் சேர்ந்த கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர், வங்கதேசத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத மூன்று மீனவர்கள் என எட்டு பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களாக ஓமன் நாட்டிற்குச் சென்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஒருவாரம் கழித்து கரை திரும்புவதுதான் வழக்கம். கடந்த செப்.16ஆம் தேதி ஓமன் நாட்டு மஜ்ஜிதா தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஒருவாரம் கடந்தும் கரை திரும்பவில்லை. பின்னர் விசாரணை மேற்கொண்டபோது, செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஓமன் நாட்டு கடற்கரையில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மஜ்ஜிதா தீவு கரையில் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எனவே ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான ராமநாதபுரம், குமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரை போர்க்கால அடிப்படையில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்கலாமே: பெங்களூரு அணியிலிருந்து ராஜஸ்தானுக்கு தாவிய பயிற்சியாளர்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் நம்புதாளை. இப்பகுதியைச் சேர்ந்த கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர், வங்கதேசத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத மூன்று மீனவர்கள் என எட்டு பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களாக ஓமன் நாட்டிற்குச் சென்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஒருவாரம் கழித்து கரை திரும்புவதுதான் வழக்கம். கடந்த செப்.16ஆம் தேதி ஓமன் நாட்டு மஜ்ஜிதா தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஒருவாரம் கடந்தும் கரை திரும்பவில்லை. பின்னர் விசாரணை மேற்கொண்டபோது, செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஓமன் நாட்டு கடற்கரையில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மஜ்ஜிதா தீவு கரையில் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எனவே ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான ராமநாதபுரம், குமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரை போர்க்கால அடிப்படையில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்கலாமே: பெங்களூரு அணியிலிருந்து ராஜஸ்தானுக்கு தாவிய பயிற்சியாளர்!

Intro:ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர்கள் குறித்து பதிலளிக்க வெளியுறவுத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஒமன் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற போது புயல் தாக்கியதில் மாயமான இராமநாதபுரம்,குமரி பகுதியை சேர்ந்த 5 தமிழக மீனவர்களை மீட்டு, இந்தியா கொண்டுவர உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர்,வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நலதுறை இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவு துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை உத்தரவு.Body:ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர்கள் குறித்து பதிலளிக்க வெளியுறவுத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஒமன் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற போது புயல் தாக்கியதில் மாயமான இராமநாதபுரம்,குமரி பகுதியை சேர்ந்த 5 தமிழக மீனவர்களை மீட்டு, இந்தியா கொண்டுவர உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர்,வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நலதுறை இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவு துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகே உள்ள மீனவ கிராமம் நம்புதாளை. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கார்மேகம்,ராமநாதன்,காசிநாதன்,காசிலிங்கம் ஆகிய நான்கு மீனவர்கள் , மேலும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு மீனவரும் , வங்காளதேசத்தை சேர்ந்த பெயர் தெரியாத மூன்று மீனவர்களும் மொத்தம் 8 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓமன் நாட்டிற்கு ஆழ் கடல் மீன் பிடி தொழிலாளர்களாக சென்று அந்நாட்டில் தங்கியிருந்து அவர்கள் நிறுவனத்திற்காக மீன் பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர் .இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ஓமன் நாட்டிலுள்ள மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் அவர்கள் , ஒரு வாரம் கழித்துதான் கரை திரும்பி வருவார்கள்..

ஆனால், ஒரு வாரம் ஆகியும் வராததால் இதுகுறித்து விசாரித்துள்ளனர் ..அப்போது கடந்த 28.09.2019 அன்று , ஓமன் நாட்டின் கடற்கரைப் பகுதியில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கிய மீனவர்கள் கரை திரும்பவில்லை , என தெரியவந்தது . இந்த நிலையில், மஜ்ஜிதா தீ வு கரையில் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்ப ட்டுள்ளது. மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எனவே ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவில் இருந்து மீன் பிடிக்க சென்று புயலில் சிக்கிய மாயமான. இரமநாதபுரம், குமரியை சேர்ந்த தமிழக மீனவர் கள் 5 பேரை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்...

இந்த பொதுநல மனு நீதிபதிகள் சிவஞானம் , தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறுவு துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர் ...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.