ETV Bharat / state

கார் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து; பட்டாசு வெடித்ததால் சம்பவம்!

author img

By

Published : Oct 28, 2019, 1:03 PM IST

மதுரை: அவனியாபுரம் அருகே தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் எதிர்பாராதவிதமாக பழைய கார் உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire in spare part guton in fireworks explosion, பட்டாசு வெடித்ததில் உதிரி பாகம் குடோனில் தீ விபத்து

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஜெயந்தி என்பவர் வாடகைக்கு பாலா கேபிள் நெட்வொர்க் என்ற நிறுவனமும், கார் உதிரிபாகங்கள் வைக்கும் கிடங்கும் வைத்துள்ளார்.

நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் ஹவுசிங் போர்டு பகுதியில் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கார் உதிரிபாகக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Fire in spare part Godown in fireworks explosion, பட்டாசு வெடித்ததில் உதிரி பாகம் குடோனில் தீ விபத்து

பழைய கார் உதிரி பாகம் என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளியன்று டெல்லியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஜெயந்தி என்பவர் வாடகைக்கு பாலா கேபிள் நெட்வொர்க் என்ற நிறுவனமும், கார் உதிரிபாகங்கள் வைக்கும் கிடங்கும் வைத்துள்ளார்.

நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் ஹவுசிங் போர்டு பகுதியில் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கார் உதிரிபாகக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Fire in spare part Godown in fireworks explosion, பட்டாசு வெடித்ததில் உதிரி பாகம் குடோனில் தீ விபத்து

பழைய கார் உதிரி பாகம் என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளியன்று டெல்லியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து!

Intro:*தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம் - தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் - அருகில் குடியிருப்பு பகுதி என்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறதுBody:*தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம் - தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் - அருகில் குடியிருப்பு பகுதி என்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக பழைய கார் உதிரி பாகம் வைக்கப்பட்ட குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சேக்அப்துல்லா என்பவர் வது இடத்தில் வாடகைக்கு ஜெயந்தி என்பவர் பாலா கேபிள் நெட்வொர்க் என்ற நிறுவனம் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்று தீபாவளி என்பதால் அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடித்த வண்ணமிருந்தன இதில் எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிக்கும் பொழுது அதில் இருந்து ஏற்பட்ட தீயினால் கார் உதிரிபாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

பழைய கார் உதிரி பாகம் என்பதால் தீ வேகமாக பரவியது அருகில் குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் இப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது ஏற்பட்ட இடத்திற்கு அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் ஒன்று வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் இருந்தும் கட்டுக்குள் தீ வராததால் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.