மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ஆதி நாராயணன் (57). இவர், பெருங்குடியிலிருந்து வில்லாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
எம்.எம்.சி காலனி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த லாரி ஒன்று இவரை முந்திச்செல்ல முற்பட்டது. இதனால் லாரியின் முன்பகுதி, இருசக்கர வாகனத்தின் மீது இடித்ததில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனால், தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு விரைந்த அவனியாபுரம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவரை இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்ற லாரியை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:
பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு - 98 பேர் காயம்