ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: முதியவர் மரணம்!

author img

By

Published : Oct 14, 2019, 8:42 AM IST

மதுரை: வில்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தானதில், 57 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

madurai

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ஆதி நாராயணன் (57). இவர், பெருங்குடியிலிருந்து வில்லாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

எம்.எம்.சி காலனி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த லாரி ஒன்று இவரை முந்திச்செல்ல முற்பட்டது. இதனால் லாரியின் முன்பகுதி, இருசக்கர வாகனத்தின் மீது இடித்ததில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனால், தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்த அவனியாபுரம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவரை இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்ற லாரியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ஆதி நாராயணன் (57). இவர், பெருங்குடியிலிருந்து வில்லாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

எம்.எம்.சி காலனி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த லாரி ஒன்று இவரை முந்திச்செல்ல முற்பட்டது. இதனால் லாரியின் முன்பகுதி, இருசக்கர வாகனத்தின் மீது இடித்ததில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனால், தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்த அவனியாபுரம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவரை இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்ற லாரியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

வில்லாபுரம்

இதையும் படிங்க:

பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு - 98 பேர் காயம்

Intro:*மதுரை வில்லாபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஹெல்மெட் உடைந்து 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலி*Body:*மதுரை வில்லாபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஹெல்மெட் உடைந்து 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலி*

மதுரை பெருங்குடி பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஆதி நாராயணன் என்பவர் பெருங்குடியிலிருந்து வில்லாபுரம் நோக்கி மெயின் ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மதுரை எம் எம் சி காலனி அருகே கடக்கும் போது அவர் சென்று கொண்டிருந்த அதே சாலையில் அவரை முந்திச் செல்வதற்காக லாரி ஒன்று கடந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பகுதி இடித்ததில் அவர் நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஆதிநாராயணன் பலியானார்.

இதில் ஆதிநாராயணன் ஹெல்மெட் அணிந்து இருந்தும் அதன் லாக்கை சரிவர லாக் செய்யாததால் விபத்தில் ஹெல்மெட் கழண்டு நொறுங்கி அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் போக்குவரத்து காவல்துறையினர் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து தொடர்பாக அவனியாபுரம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன் மூலம் இடித்து சென்ற லாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹெல்மட் அணிவதை விட அதன் Lock சரியாக செய்ய வேண்டும் மற்றும் ISO தர சான்று பெற்று ஹெல்மட்டை உபயோகபடுத்த வேண்டும் என் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.