ETV Bharat / state

"ஜிஎஸ்டி வரிவிதிப்பே பொருளாதார மந்த நிலைக்குக் காரணம்" - பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்!

author img

By

Published : Sep 17, 2019, 5:59 PM IST

மதுரை : அமெரிக்கன் கல்லூரி ஒருநாள் கருத்தரங்கத்தில் பேசிய பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகள்தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மிக முக்கியக் காரணம் என்று கூறினார்.

பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன்

மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு பொருளாதாரத் துறை சார்பாக நடைபெற்றது. இதில் பொருளாதார ஆலோசகரும், வல்லுநருமான ஜெயரஞ்சன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை குறித்துப் பல்வேறு வகையிலான விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. தேவை மற்றும் வழங்கலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இன்றைய பொருளாதார சூழலுக்குக் காரணம். ஆனால், இதுபோன்ற நிலை நமது இந்திய வேளாண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து இன்று வரை தொடர்கிறது.

விவசாயத்திற்கான மூலப்பொருள் விலை உயர்வு தொடர்ந்து நிகழ்கிறது. ஆனால், அவர்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை சரிந்து வருகிறது. கிராமப்புறங்களில் மிக சாதாரணமாக விற்பனையாகக்கூடிய பேஸ்ட், பிரஷ் போன்ற பொருட்கள்கூட இன்று விற்பனை ஆவதில்லை என அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எங்களது அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் கூறுவதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கம்

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகள்தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. பணமதிப்பிழப்பு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு. தமிழ்நாடு அரசின் தொழில்துறை புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் 50ஆயிரம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அவற்றில் குறைந்தபட்சம் 5லிருந்து 10 பேர் வேலை இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்றுதான் பொருள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:

Manmohan Singh on GST: பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டியே காரணம்; மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு பொருளாதாரத் துறை சார்பாக நடைபெற்றது. இதில் பொருளாதார ஆலோசகரும், வல்லுநருமான ஜெயரஞ்சன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை குறித்துப் பல்வேறு வகையிலான விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. தேவை மற்றும் வழங்கலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இன்றைய பொருளாதார சூழலுக்குக் காரணம். ஆனால், இதுபோன்ற நிலை நமது இந்திய வேளாண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து இன்று வரை தொடர்கிறது.

விவசாயத்திற்கான மூலப்பொருள் விலை உயர்வு தொடர்ந்து நிகழ்கிறது. ஆனால், அவர்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை சரிந்து வருகிறது. கிராமப்புறங்களில் மிக சாதாரணமாக விற்பனையாகக்கூடிய பேஸ்ட், பிரஷ் போன்ற பொருட்கள்கூட இன்று விற்பனை ஆவதில்லை என அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எங்களது அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் கூறுவதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கம்

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகள்தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. பணமதிப்பிழப்பு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு. தமிழ்நாடு அரசின் தொழில்துறை புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் 50ஆயிரம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அவற்றில் குறைந்தபட்சம் 5லிருந்து 10 பேர் வேலை இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்றுதான் பொருள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:

Manmohan Singh on GST: பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டியே காரணம்; மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

Intro:பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகளே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் - பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தமிழகத்தில் சற்றேறக்குறைய 50 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்களை மூட செய்துள்ளன அதனால் பல்லாயிரக்கணக்கான வேலை இழந்துள்ளனர் என்று பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் பேச்சு
Body:பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகளே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் - பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தமிழகத்தில் சற்றேறக்குறைய 50 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்களை மூட செய்துள்ளன அதனால் பல்லாயிரக்கணக்கான வேலை இழந்துள்ளனர் என்று பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் பேச்சு

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத் துறை சார்பாக இன்று நடைபெற்றது.

இதில் பொருளாதார ஆலோசகரும் வல்லுனருமான ஜெயரஞ்சன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை குறித்து பல்வேறு வகையிலான விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

தேவை மற்றும் வழங்கலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இன்றைய பொருளாதார சூழலுக்கு காரணம். ஆனால் இதுபோன்ற நிலை நமது இந்திய வேளாண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து இன்று வரை தொடர்கிறது. விவசாயத்திற்கான மூலப்பொருள் விலை உயர்வு தொடர்ந்து நிகழ்கிறது. ஆனால் அவர்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை சரிந்து வருகிறது இந்த சூழல் காரணமாக வேளாண்மையில் கடந்த பல ஆண்டுகளாகவே வீழ்ச்சி நிரந்தரமாகிவிட்டது.

கிராமப்புறங்களில் மிக சாதாரணமாக விற்பனை ஆகக்கூடிய பேஸ்ட் பிரஷ் போன்ற பொருட்களேகூட இன்று விற்பனை ஆவதில்லை என அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எங்களது அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் கூறுவதை இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மத்திய அரசு மேற்கொண்ட இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. பணமதிப்பிழப்பு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு. தமிழக அரசின் தொழில்துறை புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அவற்றில் குறைந்தபட்சம் 5 லிருந்து 10 பேர் வேலை இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்று தான் பொருள் என்றார்

அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பொருளாதார துறை தலைவர் பேராசிரிய முத்துராஜா பேராசிரியர்கள் ஜெபராஜ், பிரவீனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.