ETV Bharat / state

போதை இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு! - விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்

மதுரை: விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

death
author img

By

Published : Nov 30, 2020, 6:36 PM IST

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் அய்யனார். இவர் கொத்தனராக பணிபுரிந்துவந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் நண்பர்களோடு மது அருந்துவது வழக்கம். அவ்வாறு நேற்றிரவு (நவம்பர் 29) அய்யனார் கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றார். அப்போது மதுபாட்டிலை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஸ்நாக்ஸ் வாங்க கடைக்குச் சென்றுள்ளார்.

death
உயிரிழந்த அய்யனார்

ஸ்நாக்ஸ் வாங்கி வருவதற்குள்ளாக நண்பர்கள் மதுவை குடித்துவிட்டதால் அவர்களிடம் அய்யனார் தகராறு செய்துள்ளார். இந்தச் சம்பவ இடத்திற்கு அருகில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அய்யனாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த அய்யனாரின் உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு அய்யனார் போதையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அய்யனாரை சிகிச்சைக்காக அருகிலிருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அய்யனாரின் உடல் அரசு மருத்துவனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் அய்யனார். இவர் கொத்தனராக பணிபுரிந்துவந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் நண்பர்களோடு மது அருந்துவது வழக்கம். அவ்வாறு நேற்றிரவு (நவம்பர் 29) அய்யனார் கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றார். அப்போது மதுபாட்டிலை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஸ்நாக்ஸ் வாங்க கடைக்குச் சென்றுள்ளார்.

death
உயிரிழந்த அய்யனார்

ஸ்நாக்ஸ் வாங்கி வருவதற்குள்ளாக நண்பர்கள் மதுவை குடித்துவிட்டதால் அவர்களிடம் அய்யனார் தகராறு செய்துள்ளார். இந்தச் சம்பவ இடத்திற்கு அருகில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அய்யனாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த அய்யனாரின் உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு அய்யனார் போதையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அய்யனாரை சிகிச்சைக்காக அருகிலிருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அய்யனாரின் உடல் அரசு மருத்துவனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.