ETV Bharat / state

மதுரையில் கரோனா பரவலைத் தடுக்க பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு!

மதுரை: அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.

author img

By

Published : Apr 9, 2021, 6:47 PM IST

பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளித்த சுகாதார ஊழியர்.
பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளித்த சுகாதார ஊழியர்.

கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக நாளை (ஏப். 9) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசு சார்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்து பயணத்தின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க : சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு

கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக நாளை (ஏப். 9) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசு சார்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை எதிரொலியாக, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்து பயணத்தின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க : சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.