ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து விட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன் - நடிகர் பார்த்திபன்

author img

By

Published : Jul 18, 2022, 9:28 PM IST

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெற்றியையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து விட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன் - நடிகர் பார்த்திபன்
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து விட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன் - நடிகர் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரவின் நிழல் படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவுக்கு நன்றி.

தனஞ்செயன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு படம் வெற்றியடைய வேண்டியதாகத் தெரிவித்தார். எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில் என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்தத் தேடல் இருந்து கொண்டே உள்ளது. அதைத் தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து விட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன் - நடிகர் பார்த்திபன்

நான் 11 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்றுள்ளேன். திருப்பதிக்குச் சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சியை பார்க்க வருவேன். மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோயிலிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன்.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன்.

இரவின் நிழல் என்னுடைய முயற்சி அனைத்தும் போட்டு எடுத்தப் படம். இரவின் நிழல் படம் வெற்றியடைந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் படம் மாபெரும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்றால் கைவிட்டு போன ஒன்று என்ன செய்வதென்று தெரியாது.

அதற்கு நம் மனதை உள்முகமாக நகர்த்தி சின்ன பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. விருதுகளை குவிக்க உள்ள படம் இது. இந்த படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஆச்சரியத்தை கொடுத்த படம் இரவின் நிழல்.

ரஜினி சார் படம் பார்த்து 'You made an history' என பாராட்டி உள்ளார். நாளை ரஜினி சாரையும், இன்று கமல் சாரையும் பார்க்க உள்ளேன் சினிமவில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய கமல், ரஜினி போன்றோரின் வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம்.

அவர்களின் வாழ்த்துகளை பாசி மணி ஊசி மணி போல கோர்த்து கழுத்தில் போடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. பெட்டி நிறைய் பணம் இருந்நால் இங்கேயே பூஜை போட்டு விடுவேன். பெட்டி நிறைய பணம் இருந்தவர்களை கண்டுபிடித்து காலி செய்து படம் எடுக்கலாம் என உள்ளேன்.

அப்படியொரு இளிச்சவாயன் கிடைக்கிவில்லை என்றால் நானே தயாரிப்பாளர் ஆகிவிடுவேன். ஏனென்றால் என்னை விட சிறந்த இளிச்சவாயன் இல்லை. தற்போதைக்கு குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் மெதுவா ஜாலியா இருக்கும் படங்களை எடுக்க உள்ளேன்.

நிறைய கதைகள் உள்ளன. எதார்த்தமா சொல்ல வேண்டிய விஷயத்தை அது அடல்ட்ஸ் ஒன்லி என்கிற சூழ்நிலையாக மாறி விட்டது. சிங்கிள் சாட் படம் என்பதால் எங்கேயும் வெட்டாமல் எடிட் செய்யாமல் ஒரு சில இடங்களில் மீயுட் செய்தோம். அது தான் எங்களுக்கு தெரிந்த விஷயம் தானே எதுக்கு மியூட் செய்தீர்கள் என பெண்கள் கேட்டார்கள்.

அடுத்தமுறை "ஏ"இல்லமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன். மதுரையை மையமாக வைத்து படம் எடுக்க புரொடியூசர் தொழிலதிபர் யாராவது கிடைப்பார்களா என பார்க்கிறேன். சமுத்திரக்கனி சசிக்குமார் மதுரையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரவின் நிழல் படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவுக்கு நன்றி.

தனஞ்செயன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு படம் வெற்றியடைய வேண்டியதாகத் தெரிவித்தார். எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில் என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்தத் தேடல் இருந்து கொண்டே உள்ளது. அதைத் தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து விட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன் - நடிகர் பார்த்திபன்

நான் 11 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்றுள்ளேன். திருப்பதிக்குச் சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சியை பார்க்க வருவேன். மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோயிலிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன்.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன்.

இரவின் நிழல் என்னுடைய முயற்சி அனைத்தும் போட்டு எடுத்தப் படம். இரவின் நிழல் படம் வெற்றியடைந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் படம் மாபெரும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்றால் கைவிட்டு போன ஒன்று என்ன செய்வதென்று தெரியாது.

அதற்கு நம் மனதை உள்முகமாக நகர்த்தி சின்ன பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. விருதுகளை குவிக்க உள்ள படம் இது. இந்த படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஆச்சரியத்தை கொடுத்த படம் இரவின் நிழல்.

ரஜினி சார் படம் பார்த்து 'You made an history' என பாராட்டி உள்ளார். நாளை ரஜினி சாரையும், இன்று கமல் சாரையும் பார்க்க உள்ளேன் சினிமவில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய கமல், ரஜினி போன்றோரின் வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம்.

அவர்களின் வாழ்த்துகளை பாசி மணி ஊசி மணி போல கோர்த்து கழுத்தில் போடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. பெட்டி நிறைய் பணம் இருந்நால் இங்கேயே பூஜை போட்டு விடுவேன். பெட்டி நிறைய பணம் இருந்தவர்களை கண்டுபிடித்து காலி செய்து படம் எடுக்கலாம் என உள்ளேன்.

அப்படியொரு இளிச்சவாயன் கிடைக்கிவில்லை என்றால் நானே தயாரிப்பாளர் ஆகிவிடுவேன். ஏனென்றால் என்னை விட சிறந்த இளிச்சவாயன் இல்லை. தற்போதைக்கு குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் மெதுவா ஜாலியா இருக்கும் படங்களை எடுக்க உள்ளேன்.

நிறைய கதைகள் உள்ளன. எதார்த்தமா சொல்ல வேண்டிய விஷயத்தை அது அடல்ட்ஸ் ஒன்லி என்கிற சூழ்நிலையாக மாறி விட்டது. சிங்கிள் சாட் படம் என்பதால் எங்கேயும் வெட்டாமல் எடிட் செய்யாமல் ஒரு சில இடங்களில் மீயுட் செய்தோம். அது தான் எங்களுக்கு தெரிந்த விஷயம் தானே எதுக்கு மியூட் செய்தீர்கள் என பெண்கள் கேட்டார்கள்.

அடுத்தமுறை "ஏ"இல்லமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன். மதுரையை மையமாக வைத்து படம் எடுக்க புரொடியூசர் தொழிலதிபர் யாராவது கிடைப்பார்களா என பார்க்கிறேன். சமுத்திரக்கனி சசிக்குமார் மதுரையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.