மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவா் கண்ணன் மகன் முருகன். விவசாயியான இவர் தனது ஐந்து மாதம் சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரது தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கண்ணன், உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தங்கம், முன்னணி தீயணைப்பு வீரர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் முருகனின் தாயார் பாண்டியம்மாள் என்பவர் பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 40 அடி கிணற்றில் தவறி விழுந்த பெண்: உயிருடன் மீட்பு!