ETV Bharat / state

தென்காசி பெண் கடத்தல்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு

author img

By

Published : Feb 14, 2023, 3:39 PM IST

தென்காசியில் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்திய விவகாரத்தில் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தென்காசி இளம் பெண் கடத்தல்
தென்காசி இளம் பெண் கடத்தல்

மதுரை: தென்காசி கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 'நான் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். மேலும் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் கிருத்திகாவின் பெற்றோர்கள், அவரை கடத்திச் சென்று விட்டனர். எனவே, கிருத்திகாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் கிருத்திகாவை தென்காசியில் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அவரிடம் வாக்குமூலம் பெற்று தென்காசி காவல்துறையினர் உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தென்காசி நீதிமன்றத்தில் கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கிருத்திகா உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும்; அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் உத்தரவிட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கிருத்திகாவின் உறவினர்கள் தரப்பில், கிருத்திகாவை தங்களது பாதுகாப்பில் அனுப்ப உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்தனர்.

காவல்துறை தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினாலும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் கிருத்திகா பட்டேலை அவரது உறவினரிடம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் இமாச்சல் துணை முதலமைச்சர் சிறப்பு யாகம்!

மதுரை: தென்காசி கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 'நான் தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். மேலும் கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் கிருத்திகாவின் பெற்றோர்கள், அவரை கடத்திச் சென்று விட்டனர். எனவே, கிருத்திகாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் கிருத்திகாவை தென்காசியில் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அவரிடம் வாக்குமூலம் பெற்று தென்காசி காவல்துறையினர் உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தென்காசி நீதிமன்றத்தில் கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கிருத்திகா உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும்; அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் உத்தரவிட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கிருத்திகாவின் உறவினர்கள் தரப்பில், கிருத்திகாவை தங்களது பாதுகாப்பில் அனுப்ப உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்தனர்.

காவல்துறை தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினாலும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் கிருத்திகா பட்டேலை அவரது உறவினரிடம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் இமாச்சல் துணை முதலமைச்சர் சிறப்பு யாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.