ETV Bharat / state

இரண்டாம் குத்து படத்துக்கு தடைகோரிய வழக்கு - படக்குழுவினருக்கு மதுரைக் கிளை நோட்டீஸ்!

author img

By

Published : Nov 3, 2020, 4:52 PM IST

இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

hc issued notice to irandam kuthu movie team
இரண்டாம் குத்து திரைப்படத்துக்கு தடைகோரிய வழக்கு...படக்குழுவினருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இப்படத்தின் டீசரில் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சில வசனங்கள் இரட்டை அர்த்தத்தில் உள்ளன. இதுபோன்று சமூகத்தை சீர் குலைக்கும் விதமாக வெளியிடப்படும் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதேபோன்று கடந்த 2018ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வெளியிட உள்ள 'இரண்டாம் குத்து' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தடைவிதிக்க வேண்டும். இப்படத்தின் டீசரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, பாசமலர் போன்ற திரைப்படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. இதைவிட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள் தகாத உறவுகள் ஆகியவற்றை பற்றியே கூறுகிறது. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், யூடியூப், ஃபேஸ்புக், கூகுள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி நம்பிக்கை

மதுரை: மதுரையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இப்படத்தின் டீசரில் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சில வசனங்கள் இரட்டை அர்த்தத்தில் உள்ளன. இதுபோன்று சமூகத்தை சீர் குலைக்கும் விதமாக வெளியிடப்படும் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதேபோன்று கடந்த 2018ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வெளியிட உள்ள 'இரண்டாம் குத்து' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தடைவிதிக்க வேண்டும். இப்படத்தின் டீசரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, பாசமலர் போன்ற திரைப்படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. இதைவிட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள் தகாத உறவுகள் ஆகியவற்றை பற்றியே கூறுகிறது. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், யூடியூப், ஃபேஸ்புக், கூகுள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.