ETV Bharat / state

ரயில் பாதையில் நிலச்சரிவு: போக்குவரத்தில் மாற்றம்

author img

By

Published : Nov 23, 2021, 6:37 AM IST

நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை: நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (நவம்பர் 22) இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128), இன்று (நவம்பர் 23) காலை சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ஆகியவை திருநெல்வேலி - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்பட்டன

ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நேற்று இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு மதுரை வந்து சேரும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

இன்று காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627), இன்று முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகின்றன.

மதுரை: நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (நவம்பர் 22) இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128), இன்று (நவம்பர் 23) காலை சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ஆகியவை திருநெல்வேலி - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்பட்டன

ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நேற்று இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு மதுரை வந்து சேரும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

இன்று காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627), இன்று முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.