ETV Bharat / state

"ஒற்றைத்தன்மையை புகுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது" - நல்லகண்ணு சாடல்! - arivu patriya tamilar arivu

மதுரை:இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைத்து ஒற்றை மொழி, ஒற்றை ஆட்சி,ஒற்றை உணவு,ஒற்றை கருத்து என இந்தியமக்களின் வாழ்க்கையில் ஒற்றைத்துவத்தை புகுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

bjb try to Injecting singularity nallakannu said
author img

By

Published : Sep 6, 2019, 11:25 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் எழுதிய 'அறிவு பற்றிய தமிழரின் அறிவு' எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகத்திருவிழாவில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 'தமிழர் தேசிய முன்னணி' அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு," இந்தியா என்பது தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்காளம் உள்ளிட்ட பலமொழிகள் பேசக்கூடிய நாடு. இப்படி மக்கள் பேசக்கூடிய மொழிகளை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அந்த மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு சமஸ்கிருதம் தான் முதன்மையானது.

நல்லகண்ணு பேட்டி

அதிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என்று பொய்யான தகவலை மத்திய பாஜக அரசு பரப்பி வருவதோடு மட்டுமல்லாமல் அதை திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைத்து ஒற்றை மொழி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கருத்து, ஒற்றை உணவு என இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒற்றைத்தன்மையை புகுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்து மதம் என்ற முறையிலும் வடமொழி என்ற முறையிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப்படுகிறுது. எல்லா இடங்களிலும் இந்தி,சமஸ்கிருதம்,ஆங்கிலம் என புகுத்தி தமிழை புறக்கணிக்கிறார்கள். இந்திய மொழிகளிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி அது அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் எழுதிய 'அறிவு பற்றிய தமிழரின் அறிவு' எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகத்திருவிழாவில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 'தமிழர் தேசிய முன்னணி' அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு," இந்தியா என்பது தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,வங்காளம் உள்ளிட்ட பலமொழிகள் பேசக்கூடிய நாடு. இப்படி மக்கள் பேசக்கூடிய மொழிகளை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அந்த மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு சமஸ்கிருதம் தான் முதன்மையானது.

நல்லகண்ணு பேட்டி

அதிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என்று பொய்யான தகவலை மத்திய பாஜக அரசு பரப்பி வருவதோடு மட்டுமல்லாமல் அதை திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைத்து ஒற்றை மொழி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கருத்து, ஒற்றை உணவு என இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒற்றைத்தன்மையை புகுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்து மதம் என்ற முறையிலும் வடமொழி என்ற முறையிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப்படுகிறுது. எல்லா இடங்களிலும் இந்தி,சமஸ்கிருதம்,ஆங்கிலம் என புகுத்தி தமிழை புறக்கணிக்கிறார்கள். இந்திய மொழிகளிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி அது அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்

Intro:மதவெறி கொண்ட பாசிஸ ஆட்சியின் துவக்கமே பாஜக - நல்லகண்ணு குற்றச்சாட்டு

மதவெறி கொண்ட பாசிஸ ஆட்சியின் துவக்கமே பாரதிய ஜனதா கட்சி. விமர்சனம் செய்தாலே வழக்குப் போடுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி
Body:மதவெறி கொண்ட பாசிஸ ஆட்சியின் துவக்கமே பாஜக - நல்லகண்ணு குற்றச்சாட்டு

மதவெறி கொண்ட பாசிஸ ஆட்சியின் துவக்கமே பாரதிய ஜனதா கட்சி. விமர்சனம் செய்தாலே வழக்குப் போடுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சி மகேந்திரன் எழுதிய அறிவு பற்றிய தமிழரின் அறிவு எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று நடைபெற்றது. இதன் தலைமை விருந்தினராக அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ் சங்க இலக்கியங்களில் காதல் வீரம் மட்டுமில்லமல் அறிவு குறித்து ஆராய்ந்து தமிழரின் அறிவு குறித்து இந்த நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்தியா என்பது பலமொழி பேசக்கூடிய நாடு. சில லட்சக்கணக்கில் மட்டுமே சமஸ்கிருதம் படித்தவர்கள் உள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படித்தவர்கள். தமிழ் தெலுங்கு வங்காளம் உள்ளிட்ட மொழிகள் உள்ளன. பேசக்கூடிய பல மொழிகள் உள்ளன. அவற்றை தான் அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அந்த மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு சமஸ்கிருதம் தான் முதன்மையானது அதிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என பரப்பி வருவதோடு மட்டுமல்லாமல் அதை திணிப்பதற்கான முயற்சியை புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இந்தியா பல மொழிகளை கொண்ட தேசம். அதில் ஒற்றை ஆட்சி ஒற்றை மொழி ஒற்றை கருத்து ஒற்றை உணவு என இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒற்றைத் தன்மையைபுகுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்து மதம் என்ற முறையிலும் வட மொழி என்ற முறையிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப்படுகிறது. அஞ்சல்துறை தேர்வில் கூட தமிழை புறக்கணித்தார்கள். எல்லா இடங்களிலும் இந்தி சமஸ்கிருதம் ஆங்கிலம் என புகுத்தி தமிழை புறக்கணிக்கின்றனர். தாய் மொழியான தமிழ் மொழி இந்திய மொழிகளிலே மிகத்தொன்மையான மொழி அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்

ப சிதம்பரம் வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, வழக்கு ரீதியாக கைது செய்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் இவ்வளவு நாள் கழித்து இப்பொழுது தான் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திலும், இந்த தேதிக்குள் அடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சிறைப் படுத்தி உள்ளனர்
அந்த வழக்கு உண்மையா பொய்யா அது தீர்ப்பு வழங்கும் போது தெரியும்.
ஆனால் இந்த நடவடிக்கை சரியான அணுகுமுறை இல்லை. எப்பொழுதோ பேசியதற்கு தற்போது வழக்கு போடுகிறார்கள். விமர்சித்தாலே பேசினாலோ கூட வழக்கு போடுகிறார்கள். கருத்து சொன்னால் கூட வழக்கு போடுகிறார்கள். பிரதமரையோ மத்திய ஆட்சியையோ விமர்சித்தாலே வழக்கு போடப்படுகிறது. இது பாஜக வின் மதவெறி கொண்ட பாசிச ஆட்சியின் துவக்கம் என்பதை காட்டுகிறது என்றார்

மேலும் தற்போதைய பொருளாதார மந்த நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொருளாதார பின்னடைவு என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது நடைமுறையில் ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கப்படுவதோடு வேலைவாய்ப்பும் கொடுக்க மறுக்கின்றனர். எல்லா நிறுவனங்களும், தொழில்களும் முடங்கி விட்டன. அதனையே அனைத்து நிறுவனங்களும் அறிவிக்கின்றன. மோடி சொன்னாலும், யார்சொன்னாலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுத்தான் வருகின்றன.

27 அரசு வங்கிகள் இணைத்து 12 ஆக்கப்படுவதற்கு காரணம் என்ன? நிறுவனங்கள் மூடப்படுவதற்கு காரணம் என்ன? தங்கம் விலை உயர்வு ஏன், நிதி நெருக்கடி என்ற உண்மையை மறைக்கிறார்கள்.இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலர் மதிப்புக்கு வர காரணம் என்ன? 30,000 ரூபாய்க்கு மேல் பவுன் விலை உயர்ந்துள்ளது. 70 வருடமாக இல்லாத பொருளாதார நெருக்கடி தற்போது வந்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பினரே தெரிவித்துள்ளனர் என்றார்

மேலும் தற்போது தமிழக முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இங்குள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உரித்து அவர்களுக்கு அக்கறை இல்லை ஆனால் வெளிநாட்டில் இருந்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு இவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருப்பது வினோதமாக உள்ளது என்றார்

இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி மகேந்திரன் உடனிருந்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.