ETV Bharat / state

மது போதையில் இளைஞர் வெட்டிப் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை

author img

By

Published : Aug 23, 2020, 7:18 AM IST

மதுரை : மது போதையில் தனது நண்பர்களால் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

மதுரை, ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன் (வயது 29). இவர் மாநகராட்சியின் கரோனா தடுப்புப் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர், ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு பகுதியில் உள்ள பொதுக் கழிவறை வாசலில், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், பார்த்திபனின் நண்பர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன்
படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன்

அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரிமேடு காவல் துறையினர், பார்த்திபனது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

மது போதையில் இளைஞர் ஒருவர், தனது நண்பர்களாலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மின்சார ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: சிஐடி விசாரணை!

மதுரை, ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன் (வயது 29). இவர் மாநகராட்சியின் கரோனா தடுப்புப் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர், ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு பகுதியில் உள்ள பொதுக் கழிவறை வாசலில், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், பார்த்திபனின் நண்பர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன்
படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன்

அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரிமேடு காவல் துறையினர், பார்த்திபனது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

மது போதையில் இளைஞர் ஒருவர், தனது நண்பர்களாலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மின்சார ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: சிஐடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.