ETV Bharat / state

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - 5th & 8th Class public Exam

மதுரை: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மேம்பாட்டுத் துறை செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : Jan 30, 2020, 4:00 PM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”பொதுத்தேர்வில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன்படி,14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும். இந்தச் சட்டத்தில் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அறிமுகம்செய்து திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்படி எந்த மாநிலமும் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இந்தாண்டு முதல் 5, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் மறுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றிபெற வேண்டும். இந்தச் சிறுவயதில் மாணவ, மாணவிகளை மறுத்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும்.

தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில்கூட 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கக் கல்வித் துறை தீவிரமாக உள்ளது.

எனவே, நடப்பாண்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு, அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ பள்ளியில் இதுபோன்ற 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்ச்சிபெறாத மாணவர்களை அரசு என்ன செய்யப்போகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்குத் தொடர்பாக மத்திய மேம்பாட்டுத் துறை செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய குழப்பம்: தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”பொதுத்தேர்வில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன்படி,14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும். இந்தச் சட்டத்தில் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அறிமுகம்செய்து திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்படி எந்த மாநிலமும் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இந்தாண்டு முதல் 5, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் மறுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றிபெற வேண்டும். இந்தச் சிறுவயதில் மாணவ, மாணவிகளை மறுத்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும்.

தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில்கூட 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கக் கல்வித் துறை தீவிரமாக உள்ளது.

எனவே, நடப்பாண்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு, அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ பள்ளியில் இதுபோன்ற 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்ச்சிபெறாத மாணவர்களை அரசு என்ன செய்யப்போகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்குத் தொடர்பாக மத்திய மேம்பாட்டுத் துறை செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய குழப்பம்: தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

Intro:தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 , 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த இந்தாண்டு தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 , 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த இந்தாண்டு தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


CBSE பள்ளியில் இது போன்ற 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு போது தேர்வு இல்லை -மனுதாரர்.

5 மற்றும் 8 வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என செய்வது- நீதிபதிகள் கேள்வி.

5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகளை அரசு தேர்வு இயக்ககம் நடத்துமா ? அல்லது பள்ளிக் கல்வித்துறையே நடத்துமா? நீதிபதிகள் கேள்வி.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு,
பொதுத்தேர்வில் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி ,14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் . இந்த சட்டத்தில் 5 , 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு முறையை அறிமுகம் செய்து திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது . இந்த திருத்தப்படி எந்த மாநிலமும் 5 , 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தவில்லை . ஆனால் , தமிழகத்தில் இந்தாண்டு முதல் 5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் 13.9.2019 ல் அரசாணை பிறப்பித்துள்ளார் . பொதுத்தேர்வில் தோல்வி அடையும் 5 , 8ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த 2 மாதத்தில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றி பெற வேண்டும் . இந்த சிறு வயதில் மாணவ , மாணவிகளை மறு தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் . இதனால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும் .தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5, 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை .
இருப்பினும் தமிழகத்தில் 5 , 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கல்வித் துறை தீவிரமாக உள்ளது . எனவே , நடப்பாண்டில் 5 ,8 ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் . இது தொடர்பாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் , அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையைச் செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் ,இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது .


இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது CBSE பள்ளியில் இது போன்ற 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு போது தேர்வு இல்லை -மனுதாரர்.
5 மற்றும் 8 வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என செய்வது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். 5,8 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் விடை தாள்கள் அந்தந்த பள்ளிகள் திருத்தும் அல்லது வேறு பணிகளில் திருத்தப்படுமா என்பது பரிசீலனையில் உள்ளது என அரசு தரப்பில் பதில். தொடர்ந்து
வழக்கு தொடர்பாக மத்திய மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19 ம் தேதி ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.