மதுரை மாவட்டம் சமயநல்லூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காவல் நிலையம் அருகே சமயநல்லூர் பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்களை வழிமறித்து செல்போன்களைப் பறித்துச்செல்வதாக அப்பகுதி காவல் துறையினருக்குப் புகார் வந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலைத் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவரை வழிமறித்து தாக்கிய கும்பல் அவரது இருசக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவற்றைப் பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இருசக்கர வாகனம், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது இது குறித்து அவர் உடனடியாக சமயநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக வாகன சோதனையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களைக் கண்காணித்தனர். அப்போது திருடிய இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காவலர்களைக் கண்டதும் நிற்காமல் சென்றதால், காவல் துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்தது.இருசக்கர வாகனம், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது பிடிபட்டவர்கள் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, சக்தி வெங்கடேசன், சூர்யா என்பது தெரியவந்தது. மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.