ETV Bharat / state

'பிகில்' வெறியாட்டம்...! கலவர பூமியான கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி வெளியிட தாமதமானதை அடுத்து விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துக்களை சூரையாடி ரகளையில் ஈடுபட்டதால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Oct 25, 2019, 10:28 AM IST

Updated : Oct 25, 2019, 11:01 AM IST

vijay-fans-exploit-public-property

நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இன்று ஒருவழியாக இந்தப்படம் அறிவித்தபடி திரைக்கு வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தைக் காண திரையரங்குகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.

மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த அதிவிரைவுப் படை காவல் துறையினர் விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 37 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வன்முறை வெறியாட்டம்

முன்னதாக, ஓரிரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சி‌கள் திரையிட அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில்,
இரவு சுமார் 10 மணியளவில் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று காலை திரையிடப்பட்டன.

இதையும் படிங்க...

அட சண்ட போடாதீங்கப்பா..! - ட்வீட் போட்ட யோகி பாபு

நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இன்று ஒருவழியாக இந்தப்படம் அறிவித்தபடி திரைக்கு வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தைக் காண திரையரங்குகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.

மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த அதிவிரைவுப் படை காவல் துறையினர் விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 37 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வன்முறை வெறியாட்டம்

முன்னதாக, ஓரிரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சி‌கள் திரையிட அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில்,
இரவு சுமார் 10 மணியளவில் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று காலை திரையிடப்பட்டன.

இதையும் படிங்க...

அட சண்ட போடாதீங்கப்பா..! - ட்வீட் போட்ட யோகி பாபு

Intro:பிகில் வெறியாட்டம் .கலவர பூமியான கிருஷ்ணகிரி
Body:பிகில் வெறியாட்டம் .கலவர பூமியான கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியின் விஜய் ரசிகர்களின் அட்டகாசத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆனா உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தது . ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன .சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் . இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு விரிவான பாராவை
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்திற்கு இதுவரை அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.
தீபாவளி அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் அன்று வெளியாக வேண்டிய திரைப்படங்கள் அக்டோபர் 25ம் தேதியே வெளியாகின்றன.
ஆரம்பத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மட்டுமே இந்தத் தீபாவளிக்கு வெளியாகுமென கூறப்பட்டது. ஆனால், கார்த்தி நடித்த 'கைதி' படமும் தீபாவளிக்கே வெளியாவதாக அறிவித்தாரகள் .

பிகில் திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக, படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.இந்தப் படத்தின் திரையரங்க உரிமைகள் மட்டும் 80 கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் இந்தப் படம் 600 திரையரங்குகளில் வெளியாகுமென கூறிருந்தார்கள்.


பிகில் படத்தின் திரையரங்க உரிமைகளை ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது.
விஜய்யின் முந்தைய இரண்டு படங்களான சர்கார், மெர்சல் ஆகிய இரு திரைப்படங்களைவிட பிகில் திரைப்படம் அதிக தொகையை திரையரங்குகளில் வசூலிக்கும் என பட குழு எதிர்பார்க்கின்றனர். அப்பொழுதுதான் திரையரங்க உரிமைத் தொகையான 80 கோடி ரூபாயை திரும்பப் பெற முடியும்.

தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய திரைப்படங்கள் பின்வாங்குமெனக் கருதப்பட்டது. தற்போது கைதி திரைப்படம், தமிழ்நாட்டில் சுமார் 250 திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.


இந்த தொடர் நான்கு நாட்களிலிருந்துதான் பிகில் படத்தின் பெரும்பாலான திரையரங்க வசூலை மீட்க வேண்டும். பெரும்பாலான திரையரங்குகள் பிகில் திரைப்படத்திற்காக 'மினிமம் கேரண்டி'யாக ஒரு தொகையை அளித்துள்ளனர்.
ஆகவே படம் வெளியாகும் இன்று அதிகாலை காட்சிகள் நடைபெற்றால், ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்துவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வசூலைப் பெற முடியும். ஆனால், இதுவரை தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை.

"அனுமதியளிக்காத நிலையில், எந்தத் திரையரங்காவது அதிகாலை காட்சிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" மாநிலஅமைச்சர்கடம்பூர்ராஜுஏற்கனவேதெரிவித்திருந்தார்.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது தமிழக அரசு குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் வெளியிட்ட கருத்துகளின் காரணமாகவே மாநில அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.
இருந்தபோதும், பிகில் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் நடந்துவந்தன. ஏதோ ஒரு வகையில் சமரசம் எட்டப்பட்டு, காலைக் காட்சிகள் நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது.விஜயைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளியானது அப்பொழுதும் இதே பிரச்சினைதான் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது..

Conclusion:
Last Updated : Oct 25, 2019, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.