ETV Bharat / state

பொங்கலுக்குத் தயாராகும் கரும்பு - Sugarcane is getting ready for pongal

கரூர்: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முதன்மை சாகுபடிகளில் ஒன்றான கரும்பு விவசாயம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

pongal
pongal
author img

By

Published : Jan 1, 2020, 6:08 AM IST

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சுவிரட்டுக்கு அடுத்ததாக நினைவுக்குவருவது கரும்புதான். பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக கரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விற்பனை அதிகளவு நடைபெறும்.

மாவட்டத்தின் புகளுர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தளவாய்பாளையம், நொய்யல், மண்மங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் கரும்பு பயிரிட்டுவருகின்றனர். கரும்பு விவசாயத்திற்கு அமராவதி, காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெற்றுவருகின்றனர்.

பொங்கலுக்குத் தயாராகும் கரும்பு

இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு இஐடி பாரி சர்க்கரை ஆலைக்குப் பயன்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்முதல் 150 ரூபாய்வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை அமோகம்!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சுவிரட்டுக்கு அடுத்ததாக நினைவுக்குவருவது கரும்புதான். பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக கரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விற்பனை அதிகளவு நடைபெறும்.

மாவட்டத்தின் புகளுர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தளவாய்பாளையம், நொய்யல், மண்மங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் கரும்பு பயிரிட்டுவருகின்றனர். கரும்பு விவசாயத்திற்கு அமராவதி, காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெற்றுவருகின்றனர்.

பொங்கலுக்குத் தயாராகும் கரும்பு

இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு இஐடி பாரி சர்க்கரை ஆலைக்குப் பயன்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்முதல் 150 ரூபாய்வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை அமோகம்!

Intro:Body:பொங்கலுக்கு தயாராகும் கரும்பு !

கரூர் மாவட்டத்தில் முதன்மை சாகுபடிகளில் ஒன்றான கரும்பு விவசாயம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை புகளுர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தளவாய்பாளையம், நொய்யல், மற்றும் மண்மங்கலம் போன்ற பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு கரூரில் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு பயன்படுகிறது, மேலும் தற்பொழுது தை திருநாள் மற்றும் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயம் நடைபெற்று முடிந்து விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த கரும்பு விவசாயத்திற்கு பயன் உள்ளதாக, நீர்ப்பாசன வசதி யான கரூர் மற்றும் மண்மங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர் அதேபோல் அரவக்குறிச்சி வட்ட பகுதிகள் அமராவதி மற்றும் கீழ்பவானி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்ட பகுதிகள் காவிரி ஆற்று நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.