ETV Bharat / state

முகநூல் விளம்பரம்: மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது - போலி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

கிருஷ்ணகிரி: குறைந்த விலைக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒசூர் அருகே போலி விளம்பரம் செய்த ஆறு பேர் கைது
ஒசூர் அருகே போலி விளம்பரம் செய்த ஆறு பேர் கைது
author img

By

Published : Feb 5, 2020, 1:12 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக புகார் அளித்திருந்தார்.

அதில், "பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும், அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் விளம்பரபடுத்தியிருந்தார். அதை நம்பி நான் அவரை தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்தார். அப்போது அவர் சைரன் வைத்த காரில் காக்கி உடையில் காவல்துறையினர் போல் வந்தார்".

அவரை நம்பி காரில் ஏறிய என்னிடமிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கைப்பேசி, நகைகள் அனைத்தையும் பறித்துச் சென்று மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டுச் சென்றார். இவ்வாறு அந்த மனுவில் சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் போலியான காவலர் வாகனம் பேரிகை பகுதிக்கு வந்தபோது அந்த வாகன எண்ணை வைத்து காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து விசாரித்தனர்.

ஒசூர் அருகே போலி விளம்பரம் செய்த ஆறு பேர் கைது

இந்த விசாரணையில் பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் இதுபோன்று டிஎஸ்பி, ஐடி அலுவலர் வேடங்களில் பொதுமக்களை ஏமாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற ஐந்து நபர்களான பாபு, சக்திவேல், கண்ணன், மன்சூர், மதன்செட்டி ஆகியோரையும் சேர்த்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


இதையும் படிங்க;

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக புகார் அளித்திருந்தார்.

அதில், "பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும், அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் விளம்பரபடுத்தியிருந்தார். அதை நம்பி நான் அவரை தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்தார். அப்போது அவர் சைரன் வைத்த காரில் காக்கி உடையில் காவல்துறையினர் போல் வந்தார்".

அவரை நம்பி காரில் ஏறிய என்னிடமிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கைப்பேசி, நகைகள் அனைத்தையும் பறித்துச் சென்று மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டுச் சென்றார். இவ்வாறு அந்த மனுவில் சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் போலியான காவலர் வாகனம் பேரிகை பகுதிக்கு வந்தபோது அந்த வாகன எண்ணை வைத்து காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து விசாரித்தனர்.

ஒசூர் அருகே போலி விளம்பரம் செய்த ஆறு பேர் கைது

இந்த விசாரணையில் பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் இதுபோன்று டிஎஸ்பி, ஐடி அலுவலர் வேடங்களில் பொதுமக்களை ஏமாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற ஐந்து நபர்களான பாபு, சக்திவேல், கண்ணன், மன்சூர், மதன்செட்டி ஆகியோரையும் சேர்த்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


இதையும் படிங்க;

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

Intro:ஒசூர் அருகே குறைந்த விலைக்கு தங்கம் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்து பணத்துடன் வருபவர்களை நம்பிக்கை மோசடி செய்த பலே கூட்டாடிகள் 6 பேல் கைதுBody:ஒசூர் அருகே குறைந்த விலைக்கு தங்கம் வழங்குவதாக கூறி விளம்பரம் செய்து பணத்துடன் வருபவர்களை நம்பிக்கை மோசடி செய்த பலே கூட்டாடிகள் 6 பேல் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் ஏமாற்றப்பட்டதாக புகாரளித்திருந்தார்.

அந்த புகாரில், பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும் அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்தியிருந்ததை நம்பி பிரகாஷ் என்பவருக்கு தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

தங்கம் விற்பதாக கூறிய வியாபாரியிடம் விலை பேசி வந்தபோது, சைரன் வைத்த காரில் காக்கி உடையில் போலிசார் போல வந்ததாகவும் இதுக்குறித்து விசாரிக்க வேண்டுமென சுரேஷ்குமார் மற்றும் அவரின் கார் ஓட்டுநரை போலியான போலிசார் காரில் அழைத்து சென்று அவர்கள் கொண்டுவந்திருந்த 780000 ரூபாயையும், அவர்களின் கைப்பேசி அணிந்திருந்த நகை உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டு சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுக்குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தநிலையில் போலியான போலிஸ் வாகனம் பேரிகைக்கு வந்தபோது வாகன எண்ணை வைத்து பேரிகை போலிசார் 6 பேரை அதிரடியாக கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் டிஎஸ்பி, ஐடி அதிகாரி வேடங்களில் ஏமாற்றி வருவது தெரியவந்தது.

பிரகாஷ், பாபு, சக்திவேல், கண்ணன், மன்சூர், மதன்செட்டி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.